சனி, 21 மார்ச், 2015

சோம்பின் பயன்கள் ......

சோம்பின் பயன்கள் ......
ஆடவர் ,பெண்டிர் இருவருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு. இதற்கு காரணம் அலுவலகத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, முறையற்ற உணவு பழக்க வழக்கம் ,நேரத்திற்கு சாப்பிடாமல் இருத்தல் ,வீட்டுச் சாப்பாடு இல்லாமல் கண்ட இடங்களில் துரித உணவை வாங்கிச் சாப்பிடுவதால் உடலில் கொழுப்பு அதிகரிப்பது போன்றவையாகும்.
மேலும் பெண்களைப் பொறுத்தவரை உடல் உழைப்பு குறைந்து போனது மட்டுமின்றி, (மிக்சி கிரைண்டர் ,மைக்ரோவேவ் )ஆகியவற்றின் பங்கும் உண்டு.
போதுமான சத்தான உணவு இல்லாததும் ஒரு காரணமாக இருக்கிறது.
இதுதவிர, காலை பிள்ளைகளை பள்ளிக்கு /கல்லூரிக்கு அனுப்பியது முதல் மாலை அவர்கள் வீடு திரும்பும் வரையிலும் தொலைக்காட்சி முன்பு அமர்வது, பகலில் அதிக நேரம் தூங்குவது போன்றவையும் காரணமாக உள்ளது..இதை போன்ற வேண்டா பழக்கங்களால் உடலில் தேவையற்ற இடங்களில் கொழுப்பும் ஊளைசதையும் சேரும் அதனால் பல உடல் உபாதைகள் ஏற்பட வழி வகுக்கும் ....இப்படி அதிகப்படியாக சேர்த்த கொழுப்பை கரைக்க சோம்பு பயன்படுகின்றது .
சோம்பு அல்லது பெருஞ்சீரகம் சீன ,அரேபிய ,இந்தியர்களால் சமையல் மற்றும் மருந்து மூலிகையாக தொன்று தொட்டு
பயன்படுத்தப்பட்டு வருகின்றது .
வீட்டுச் சமையலில் வாசனைக்காக பயன்படுத்தப்படும் சோம்பு, சிறந்த மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது. பெருஞ்சீரகம், வெண்சீரகம் என்று அழைக்கப்படும் சோம்பு வெண்மை நிறத்துடன் சிறிது பச்சை கலந்த நிறமுடையது. இது பூண்டு வகையைச் சார்ந்தது.
பெரும்பாலான உணவகங்களில் சாப்பிட்டு முடித்த பின் பில்லுடன் சிறிது சோம்பும் வழங்கப்படும் ..இது வாய் துர்நாற்றம் மற்றும் செரிமானத்துக்காக தருவார்கள் .
தாகத்திற்காக குடிக்கும் தேவையற்ற அதிக இனிப்பு சேர்த்த பானங்களை தவிர்த்து, அதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைக் குடிக்கலாம். சோம்பு கலந்த தண்ணீரைக் குடிப்பதால் விரைவிலேயே உடம்பில் உள்ள ஊளை சதைகள் குறைந்து, உடல் அழகான வடிவத்திற்கு வந்துவிடும்.கண்ட நேரத்தில் நொறுக்கு தீனி சாப்பிடுவதை மற்றும் அளவற்ற பசியை சோம்பு குறைக்க உதவுகின்றது .
சோம்பில் உள்ள ஒரு வகை எண்ணெய் குடல் இரைப்பை பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வு வாய்வு கோளாறு வயிறு உப்பசம் போன்ற பிரச்சினை உள்ளவர்கள் உணவிற்கு பின்னர் இந்த தேநீரை அருந்துவது சிறந்த நலன் பயக்கும் .
வயிற்றுபிடிப்பு அஜீரணம் போன்ற தொல்லைகளுக்கு சோம்பு சிறந்த நிவாரணி .
சோம்பில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் இருப்பதால் உடலுக்கு மிக சிறந்தது .
அதிகப்படியான நச்சு நீர் உடலில் சேர்வதை சோம்பு தேநீர் அருந்துவதன் மூலம் வெளியேற்றலாம் .
சிறுநீரகங்களுக்கு மிக நல்லது சோம்பு தேநீர் .தொண்டை புண் ,தடுமல் இருமல் ஆகியவற்றுக்கு சிறந்த நிவாரணி .
இரத்த அழுத்தை சீர் செய்ய வல்லது சோம்பு
.நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது சோம்பு தேநீர் .
புற்றுநோய் வராமல் தடுக்க வல்லது ,வயிற்று போக்குக்கு சிறந்த மருந்து ,
சோம்பு சிறந்த மலமிளக்கி ,இரத்த ஓட்டத்தை சீர்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகின்றது ,
பார்வை குறைபாடுகள் மற்றும் நுரையீரல் பிரச்சினைகளுக்கும் சிறந்த மருந்து சோம்பு
சிறு பிள்ளைகளுக்கு உணவு செரிமானம் ஆகாமல் வயிறு வழியால் அவதிப்படும்போது சோம்பு தேநீர் சிறந்த பலன் தரும் .
சில பிள்ளைகளுக்கு விக்கல் அடிக்கடி வந்து தொல்லை தரும்அப்போது இந்த தேநீரை கொடுக்க உடனடியாக விக்கல் நிற்கும் . இரத்த சோகைக்கு சிறந்த மருந்து சோம்பு .குடலில் உள்ள சிறு புழுக்களை சோம்பு அழிக்க வல்லது .
வாயின் உட்புறம் ஏற்படும் சிறு புண்களை குணமாக்கும் .
சோம்பிலுள்ள இரும்பு மற்றும் கால்சியம் சத்துக்கள் உடலுக்கு நலம் பயக்கும்
கர்ப்பிணி பெண்கள் சோம்பு தேநீரை அருந்த வேண்டாம் .தவிர்க்கவும் .
pms போன்ற மாதவிடாய் பிரச்சினைக்கு மெனோபாஸ் ,மற்றும் ஒழுங்கற்ற மாதவிடாய் கோளாறு உள்ளவர்கள் சோம்பு தேநீரை அருந்திவர நல்ல பலன் கிடைக்கும் .
பாலூட்டும் தாய்மார்கள் தினமும் ஒரு கோப்பை சோம்பு தேநீரை அருந்தி வர பால் சுரக்கும் .மேலும் கருப்பையிலுள்ள வேண்டா கழிவுகள் நீங்கும் .இவ்வளவு மகிமை நிறைந்த சோம்பினை தேநீராக மற்றும் அதன் கீரையை சமைக்கும்போதும் உணவில் சேர்த்து கொள்வது மிக நல்லது .
சோம்பு தேநீர்
இப்பொது அனைத்து பல்பொருள் அங்காடிகளிலும் சோம்பு தேநீர் பாக்கெட்டுகளில் விற்பனையாகின்றது .
நாமே வீட்டிலும் எளிய முறையில் சோம்பு தேநீர் தயாரிக்கலாம் .
மூன்று கோப்பை நீரை பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைக்கவும் .ஒரு மேசைக்கரண்டி முற்றிய சோம்பு விதைகளை எடுத்து சற்று இடித்து கொதிநீரில் போட வேண்டும் பிறகு அடுப்பை அணைத்து பாத்திரத்தை தட்டு போட்டு மூடி வைக்க வேண்டும்
ஏழெட்டு நிமிடம் கழித்து அந்நீரை வடிகட்டி அருந்த வேண்டும்