சனி, 21 மார்ச், 2015

தொட்டி மற்றும் பைகளில் உருளைக்கிழங்கு வளர்க்கும் முறை ..


தொட்டி மற்றும் பைகளில் உருளைக்கிழங்கு வளர்க்கும் முறை ..
மண் தொட்டி அல்லது பிளாஸ்டிக் வாளியில் பாதி அளவிற்கு மட்டும் மண் + காய்ந்த இலை,
தழை, மண்புழு உரம் கலந்த கலவையை போடவேண்டும்.
நன்றாக விளைந்த உருளைகிழங்கை பாதியாக வெட்டி , வெட்டிய பாகம் கீழே இருக்குமாறு
மண்ணில் ஊன்றி வைக்கவும்.
செடி ஓரளவு வளர்ந்ததும் மேலும் கொஞ்சம் மண்ணை போடவேண்டும்.
முதலில் மொத்தமாக போடாமல் இவ்வாறு செய்வதால் கிழங்கு நன்கு திரட்சியாகவும், அதிக எண்ணிக்கையிலும் கிடைக்க வாய்ப்பு உண்டு.
மற்றொரு முறை ....
வீட்டில் வாங்கி வைத்த கிழங்குகள் சில நேரம் முளை விட்டிருக்கும் அல்லது விதைக்கவென நாமே chitting முறையில் முளைக்க வைக்கலாம் ..
நன்கு முற்றிய கிழங்குகளை முட்டை வைக்கும் கார்ட்போர்ட் முட்டை பெட்டியில் செங்குத்தாக நிற்க வைத்து ஒளிபடும் இடத்தில் வைக்க வேண்டும் ,
இவை தானாக சில நாளில் முளைக்கும் (1.5 செண்டி மீட்டர் அளவு வளர்ந்துவிடும் ) ...
அப்படி முளைத்த கிழங்குகளை கோணிப்பை /கருப்பு பாலித்தீன் பை போன்றவற்றில் கலப்பு உர மண்
நிரப்பி வளர்க்கலாம் .
பைகளில் அடிப்பாகத்தில் நீர் வெளியேற துளைகள் இட வேண்டும் ..
பையில் பாதி அளவுக்கு சுமார் 30 செ.மீ அளவுக்கு கலப்பு உரமண்ணை இட்டு அதில் முளைவிட்ட கிழங்குகளை புதைத்து அதன்மேல் மீண்டும்கலப்பு உர மண்ணால் மேலும் 15 செ .மீ உயரம் வரை நிரப்பி மூட வேண்டும்
மேற்பகுதி பையின் விளிம்பு பாகத்தை வெளிப்புறமாக மடித்து விட வேண்டும் .
இந்த பையை நன்கு சூரிய ஒளி படும் இடத்தில நான்கு செங்கல்களின் மேல் வைத்து ,தினமும் நீர் ஊற்றி
வர வேண்டும் .
நத்தை போன்றவை செடியை அண்டாதிருக்கவும் நீர் வெளியேற வசதியாகவும் இந்த செங்கல்கள் பயன்படும் .
சுமார் மூன்று வாரத்தில் இலை முளைத்து செடி வளர ஆரம்பிக்கும் .
அவை மேலும் 15 செண்டி மீட்டர் உயரம் வளர்ந்ததும் பையின் மேற்பக்கத்தை உட்புறம் பிரித்து விட்டு மேலும் சிறிது கலப்பு உரத்தை இட வேண்டும் .
செடி வளர வளர பையை விரித்து விட வேண்டும் .
இரண்டு மாதத்தில் பூ விட துவங்கும் ,இலைகளும் வாட ஆரம்பிக்கும் இது அறுவடைக்கு உகந்த நேரம் .
இப்போது கிழங்கை மண்ணிலிருந்து அறுவடை செய்து எடுக்கலாம் .
பைகளில் வளர்க்கும்போது உருளைகிழங்கு தேவையற்ற பூச்சி மற்றும் நோய் தாக்குதல்களிலிருந்து
தவிர்க்கப்படுகின்றது .
பத்து கிலோ அரிசி கோணிப்பையில் 5 இலிருந்