வெள்ளி, 7 ஜூன், 2013

GRASS HEADS :))



தேவையான பொருட்கள் 

ஒரு பழைய சாக்ஸ் அல்லது லினன் ஸ்டாக்கிங்க்ஸ் 
ரப்பர் பாண்ட்
மண் ,புல் விதைகள் .
சாக்ஸ் எடுத்து அதில் நிறைய புல் விதைகளை நிரப்பி அதன் மேல் மண்ணையும் நிரப்பி கணுக்கால் பாத அளவு வரை வந்ததும் ரப்பர் பான்டால் இறுக்கி கட்டி மிகுதியை கத்தரியால் வெட்டி விடவும் பிறகு அதன் மேல் நீர் தெளித்து தலை கீழாக திருப்பி ஒரு சிறு பிளாஸ்டிக் BOX /GLASS JAR அல்லது வட்ட வடிவ தட்டின் மீது வைத்து மேற்புறம் அடிக்கடி நீர் தெளித்து வர ஐந்தாறு நாட்களில் மெது வாக பச்சை புற்கள் முளைக்க துவங்கும் .
இதை GRASS HEADS என்றழைப்பார்கள் ...கண் /காது மூக்கு போன்ற வற்றை அழகுக்கு ஓட்ட ..நன்றாக இருக்கும் .சிறு வயது முதல் பிள்ளைகளக்கு இயற்க்கை மீது நாட்டம் வர வைக்க இப்படியான சிறு முயற்சிகள் உதவும் ...அதிகமாக வளரும் புற்களை பிள்ளைகளை வைத்தே ட்ரிம் செய்யலாம் .

புதன், 29 மே, 2013

மீள் பயன்பாடு !!

மீள் பயன்பாடு !!
உபயோகமற்ற நீர் ஊற்றிவைக்கும் பிளாஸ்டிக் தொட்டிகளை இப்படியும் பயன்படுத்தலாம்

recycle


படம் சொல்லும்


மீள் பயன்பாடு :))





பழைய மழை பூட்ஸ் ..இப்படியும் செடி வளர்க்க பயன்படும் அடிப்புறத்தில் துளையிட்டு மண் நிரப்பி பயன்படுத்தலாம் ...
இவற்றில் உயரமாக வளரும் லெமன் கிராஸ் செடி வளர்க்க ஏதுவாக இருக்கும் ..
லெமன் கிராஸ் ஒரு கொசு விரட்டியும்கூட ..

பிளாஸ்டிக் பாட்டில் ....மீள் பயன்பாடு



பிளாஸ்டிக் பாட்டில் ....மீள் பயன்பாடு
Recycling ideas using old plastic bottles

பூந்தொட்டியாக ...Plastic Bottle 
பழைய குளிர்பான பாட்டிலை எடுங்க ,பாதியாக வெட்டி ,பின்பு மூடிபகுதியில் துளையிட்டு (இது நீர் வெளியேற )மறு பக்கம் திருப்பி வைத்து பிறகு மண் நிரப்பி விரும்பிய செடியை நட்டு வைக்கலாம் .

திங்கள், 20 மே, 2013

மீள் பயன்பாடு !!!

மீள் பயன்பாடு !!!
பழைய கார் tyre ..இப்படியும் பயன்படுத்தலாம் ..
தூக்கி எறிந்தாலும் மாசுதான் எரித்தாலும் மாசுதான் ..இப்படி அழகான தொங்கும் வகை மலர் செடிகள் வளர்க்க உபயோகமாக இருக்கும்

மீள் பயன்பாடு ..

மீள் பயன்பாடு ..
பழைய வாஷ் பேசின் சின்க் ..இதனை தூக்கி எறியாமல் இப்படி பயன்படுத்தினால் 
தோட்டத்துக்கு அழகும் கூடும் சின்ன பறவைகளின் தவித்த வாய்க்கு நீரும் கொடுத்தார் போல ஆகும் 
குறிப்பாக வறண்ட வெயில் காலங்களில் வாயில்லா ஜீவன்களுக்கு பயன்படும்

வியாழன், 9 மே, 2013

வீட்டுத் தோட்டம் டிப்ஸ்


வீட்டுத் தோட்டம் டிப்ஸ் 
------------------------------------

சிறிது ஆர்வம்,அக்கறை இருந்தால் போதும் எந்த பழைய பொருளையும் உபயோகமானதாக மாற்றலாம். 

தோட்டம் போட இடம் இல்லை என்பவர்கள் ...தேவையில்லாம பழைய பொருட்கள் வீட்டில் அடைஞ்சு கிடக்கு என்பவர்கள்...இனி இவை இரண்டையும் ஒன்று சேருங்கள் ...அழகான தோட்டம் ரெடி !

சனி, 4 மே, 2013

பழைய பல்ப் விளக்கானது.

REUSE...! 

பழைய பல்ப் விளக்கானது.

வாளியில் வாழைமரம் !!!!

வாளியில் வாழைமரம் !!!!

பழைய காபி கெட்டில் அழகிய பூ ஜாடியானது !

REUSE ! 


பழைய காபி கெட்டில் அழகிய பூ ஜாடியானது !

பழைய பாட்டில் அழகான பூ ஜாடியானது !

REUSE !


பழைய பாட்டில் அழகான பூ ஜாடியானது !

செவ்வாய், 23 ஏப்ரல், 2013

மின்னணுக் கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடுகள்!

கணினிகள் , மடிக்கணினிகள், மின் இசைக் கருவிகள், செல்போன்கள், காமிராக்கள், டேப்ரிக்கார்டர்கள், பென்டிரைவ்கள், பிளாப்பிகள், சிடிக்கள், தொலைக்காட்சிப் பெட்டிகள், கால்குலேட்டர்கள்,தொலைபேசிகள், தொலை நகலிகள், கைக்கடிகாரங்கள், மின்னணுப் பலகைகள், அச்சிடும் கருவிகள், மின் கலங்கள் உள்ளிட்ட பல்வேறு மின்னணுக் கருவிகளிலிருந்து ஒதுக்கப்படுவைகள் மின்னணுக் கழிவுகள் ஆகும்.

சென்ற நூற்றாண்டின் இறுதியில் மின்னணுத் தொழிற்சாலைகள் மற்றும் மின்னணுப் பொருட்களின் உற்பத்தி மிக வேகமாக வளர்ந்தது. பொருளாதார தொழில் நுட்ப வளர்ச்சி ஏற்பட்டது. நுகர்வோர்களை குறிவைத்து தயாரிப்புகள் செய்யப்பட்டன.

நோக்கியோ , சாம்சங் , சோனி எரிக்சன், மோட்ரோலா, சோனி முதலிய பன்னாட்டு நிறுவனங்கள், இந்தியாவிலுள்ள டாடா, ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து மின்னணுப் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை நடத்தி வருகின்றன.

இந்தியாவில் எதிர்வரும் பத்தாண்டுகளில் 500% மின்னணுக் கழிவுகள் அதிகரிக்கும் என மதிப்பிடப்படுகிறது. தற்போது ஆண்டுக்கு 4 லட்சம் மெட்ரிக் டன்கள் மின்னணுக் கழிவுகள் உருவாக்கப்படுகிறது. மின்னணுக் கழிவுகளின் அளவு இன்னும் சில ஆண்டுகளில் இரண்டு மடங்கு அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஓர் ஆண்டில் மட்டும் 1200 மெட்ரிக் டன்கள் எலெக்ட்ரானிக் கிராப் உருவாக்கப்படுகிறது. பெங்களுரில் மட்டும் ஆண்டுக்கு 8000 மெட்ரிக் டன்கள் மின்னணுக் கழிவுகள் வெளியிடங்களில் கொட்டப்படுகிறது.

சீனா, தாய்லாந்து முதலிய நாடுகளிலிருந்து கிடைக்கும் மலிவான மின்னணுப் பொருட்கள், இந்தியாவிற்குள் அதிக அளவில் தாராளமாக இறக்குமதி செய்யப்படுகிறது. மலிவு விலைக்கு வாங்கப்படும் இப்பொருட்கள் குறைந்த காலங்களிலேயே மின்னணுக் கழிவுகளாகி விடுகின்றன.

உபயோகமற்ற மின்னணுக் கழிவுகளிலிருந்து அபாயகரமான நச்சுப் பொருட்கள் வெளியேறி, மனிதர்களுக்கு புற்று நோய், நரம்புத் தளர்ச்சி, கண் பார்வைக் குறைபாடு முதலிய பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. மேலும், மின்னணுக் கழிவுகள் மண்ணையும் , நீரையும், காற்றையும் மாசடையச் செய்கின்றன.

மின்னணுக் கழிவுகளில் நச்சுத் தன்மையுள்ள காரீயம், பாதரசம், குரோமியம், இரும்பு, காப்பர், அலுமினியம், தங்கம் முதலிய உலோகங்கள் கலந்து உள்ளன.

காப்பரிலிருந்து ‘ டையாக்சின் ‘ என்னும் நச்சுப் பொருள் வெளியாகிறது. இதனால் காற்று மாசடைகிறது. கணினிகள் மற்றும் எலெக்ட்ரிக் பொருட்கள் ‘டாக்சி சையனைடு‘ என்னும் நச்சுப் பொருளை வெறியேற்றுகிறது.

மின்னணுக் கழிவுகளில் உள்ள பாதரசம், மனிதனின் நினைவுகளை பாதிப்படையச் செய்கிறது. தசைகளை பலகீனப் படுத்துகிறது. விலங்குகளின் உயிர்களுக்கு உலை வைக்கிறது. கருவுருதல், இனப்பெருக்கம் பாதிக்கப்படுகிறது.

மின்னணுக் கழிவுகளில் கலந்து உள்ள ‘ சல்பர் ‘மனிதர்களின் கல்லீரல், இதயம், கண், தொண்டை, நுரையீரல், நரம்பு முதலியவற்றை சீர்கேடு அடையச் செய்கிறது.

புதுடெல்லி, பெங்களூர், சென்னை, மும்பை முதலிய பெருநகரங்களில் மின்னணுக் கழிவுகள் அதிக அளவில் கொட்டப்படுகிறது. கங்கை நதியும் மின்னணுக் கழிவுகளிலிருந்து தப்பவில்லை. மின்னணுக் கழிவுகளை எரிப்பதால் காற்று மண்டலம் பாதிக்கப்படுகிறது. மின்னணுக் கழிவுகளால் நிலத்தடி நீர் மிகவும் பாதிப்படைகிறது. மின்னணுக் கழிவுகள் மக்கும் தன்மையற்ற திடக்கழிவுகளாக உள்ளதால் சுற்றுச் சூழலின் தன்மையையும், எழிலையும் சீரழிக்கிறது.

மின்னணு பொருட்கள் மற்றும் கழிவுகளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வது, இந்தியாவில் எதிர்காலத்தில் சுற்றுச் சூழல் பாதிப்பை மேலும் அதிகரிக்கச் செய்யும்.

மின்கலம் (பேட்டரி) பயன்படுத்திய பின்னர் குப்பையில் தூக்கி வீசப்படுகின்றன. மின்கலத்தில் உள்ள உலோகத்துகள்களானது நிலத்திற்குள் ஊடுருவி நிலத்தடி நீரை மாசுபடுத்துகிறது. மின்கலங்களை எரிப்பதால் காற்று மாசுபடுகிறது.

அய்ரோப்பிய யூனியன் 2005 ஆம் ஆண்டு ஒரு திடக்கழிவுச் சட்டத்தைக் கொண்டு வந்தது. இச்சட்டத்தின்படி பயன்படுத்த முடியாத மின்னணு சாதனங்களைச் சேகரிப்பது, மறு சுழற்சி செய்வது மற்றும் கழிவுகளை அகற்றுவது முதலியவைகளை, அந்த சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் பொறுப்பாகும். மேலும், இந்தப் பணியை உள் நாட்டிலேயே செய்ய வேண்டும். இந்த அபாயகரமான மின்னணுக் கழிவுகளை, பயன்படுத்த முடியாத சாதனங்களை வேறு எந்த நாட்டுக்கும் ஏற்றுமதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்கா மின்னணுக் கழிவுகளை உருவாக்கும் உலகத் தலைவனாக உள்ளது. மேலும், உலக அளவில் 80% மின்னணுக் கழிவுகளை அமெரிக்கா கொட்டுகிறது. அமெரிக்கா ஒவ்வொரு ஆண்டும் 3 மில்லியன் மெட்ரிக் டன்கள் மின்னணுக் கழிவுகளை ஏற்படுத்துகிறது . அமெரிக்காவில் ஆண்டு ஒன்றுக்கு 30 மில்லியன் கணினிகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

உலகில் பல நாடுகள் மின்னணுக் கழிவுகளை தாங்களே மறு சுழற்சி செய்து கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால், இக்கட்டுப்பாடுகளை அமெரிக்கா தனது காலில் போட்டு மிதிக்கிறது. மென் பொருள் தயாரிக்கும் நிறுவனங்களை அதிகம் கொண்ட அமெரிக்காவில் தான் மின்னணுக் கழிவுகள் சேருவதும் அதிகம். மின்னணுக் கழிவுகளால் ஏற்படும் விளைவுகளை அறிந்துள்ள அமெரிக்கா அதனை வேறு நாடுகளுக்கு சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்துவிட்டு, தனது நாட்டின் சுற்றுச் சூழலை காப்பாற்றிக் கொள்வதில் உறுதியாக உள்ளது. மேலும், தொண்டு நிறுவனங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும். அறக்கட்டளைக்கும் உதவி செய்வதாகக் கூறிக் கொண்டு , இந்தியா போன்ற நாடுகளுக்கு பழுதடைந்த மற்றும் செயல்திறன் குறைந்த கணினிகளையும், பிற மின்னணுப் பொருட்களையும் அனுப்பி வருகின்றது. பேசில் ஒப்பந்தத்தில் (Basel Agreement) அமெரிக்கா கையொப்பமிட மறுத்துவிட்டது.

ஓரு கணினியில் 1000- க்கும் மேற்பட்ட பொருட்கள் உள்ளது. அதில் 50 பொருட்கள் நச்சுத் தன்மை கொண்ட உலோகங்களாலும், கலவைகளாலும் ஆனது. பழுதடைந்து கணினிகளிலிருந்தும், அதன் பாகங்களிலிருந்தும் நச்சு கசியத் துவங்குகிறது.

சென்னை துறைமுகத்தில் வருமானவரி அமலாக்கப் பிரிவினர் நடத்திய சோதனையில், பல கன்டெயினர்களில் காலாவதியான கணினிகள் மற்றும் மின்னணுக் கழிவுகள் ஏற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவைகள் ஆஸ்திரேலியா , கனடா, கொரியா, புருனே முதலிய நாடுகளிலிருந்து விதிமுறைகளை மீறி கொண்டு வரப்பட்டது.

இந்தியக் கடலோரப் பகுதிகளில் குறிப்பாக தமிழகக் கடலோரப் பகுதிகளில் மின்னணுக் கழிவுகள் அதிகம் கொட்டப்படுகிறது. இந்தியாவை மின்னணுக் கழிவுகளின் குப்பைத் தொட்டியாக மேலை நாடுகள் மாற்றிவருகின்றன.

மின்னணுக் கழிவுகளை மேலாண்மை செய்வதற்கும், மறு சுழற்சி செய்வதற்கும் தயாரிப்பாளர்கள், இறக்குமதியாளர்கள், மறு சுழற்சியில் ஈடுபடுபவர்கள், உபயோகிப்பாளர்கள் முதலியோர் இணைந்து செயல்பட வேண்டும்.

மின்னணுக் கழிவுகளை மேலாண்மை செய்திட உபயோகிப்பாளர்களிடம் கணினிகளுக்கு 3.94% லிருந்து 5.95% வரையும், தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு 3.4% லிருந்து 5% வரையும், செல் போன்களுக்கு 3.4% லிருந்து 5% வரையும் சேவைத் தொகை, விலையுடன் சேர்த்து வாங்கப்படுகிறது. ஆனால், மின்னணுக் கழிவுகளை மேலாண்மை செய்வதில் எந்தவொரு தயாரிப்பு நிறுவனமும் ஈடுபடுவதில்லை.

மின்னணுக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் பணியில் புதுடெல்லியில் மட்டும் 30, 000 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நவீன இயந்திரங்கள் இல்லாமல், பாதுகாப்பு கருவிகள் இல்லாமல், வெறுமனே சுத்தியல் , திருப்புளி கொண்டு பெண்களும், குழந்தைகளும் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது உடலில் காயங்கள் ஏற்படுதல், உடல் நல பாதிப்புகள் அடைதல், காற்றோட்டமில்லாத சூழல், முகம் மூடுவதற்கு மாஸ்க் , முகமூடிக்கவசம் முதலியவைகள் இல்லாதது. உயர் தொழில் நுட்ப நவீன கருவிகள் வழங்கப்படாதது முதலிய மோசமான நிலைமகள் நிலவி வருகிறது. மேலும், மின்னணுக் கழிவுகளிலிருந்து சில உலோகங்களைப் பிரிப்பதற்கு, சுத்தப்படுத்துவதற்கு வீரியமுள்ள அமிலங்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த அமிலங்களினால் மனித உடலிலும், தோலிலும் பாதிப்புகள் உண்டாகிறது.

மின்னணுப் பொருட்கள் தயாரிப்பாளர்கள், நகராட்சி அமைப்பினர், மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் , கொள்கை வகுப்பாளர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு மின்னணுக் கழிவுகள் மேலாண்மை குறித்து திட்டமிட வேண்டும். மின்னணுக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கு தகுந்த முறைகள் உருவாக்கப்பட வேண்டும்.

நச்சுத் தன்மையுள்ள மின்னணுக் கழிவுகள் குறித்தும் சுற்றுச் சூழல் பாதிப்பு மற்றும் மனித உடலநலப் பாதிப்புகள் குறித்தும் சிறப்பு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

இந்தியாவில் மின்னணுக் கழிவுகள் குறித்து சட்டங்கள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் தெளிவாக ஏற்படுத்தப் படவேண்டும்.

மின்னணுக் கழிவுகளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்திட , மத்திய வனம் மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சகம், மாநில அரசின் மாசுகட்டுப்பாட்டு வாரியம் முதலியவற்றின் சிறப்பு அனுமதி பெற வேண்டும்.

மின்னணுக் கழிவுகளை மறு சுழற்சி செய்யும் நிறுவனங்கள் அனைத்தையும் மத்திய சுற்றுச் சூழல் கட்டப்பாட்டு வாரியத்தின் கீழ் கொண்டு வர வேண்டும்.

இந்தியாவில் உள்ள பெருநகரங்களில் மின்னணுக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கும், மேலாண்மை செய்வதற்கும் மத்திய சுற்றுச் சூழல் கட்டுப்பாட்டு வாரியம் உதவி புரிந்திட வேண்டும்.

மின்னணுக் கழிவுகளை மேலாண்மை செய்வதற்கு தேசிய, மாநில அளவிலான செயல்பாட்டுக் குழு அமைக்கப்பட வேண்டும்.

இந்திய சுற்றுச் சூழல் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்ப தொழிற்கழகம், தகவல் தொழில் நுட்பத் துறை, தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் முதலிய அமைப்புகள் இணைந்து மின்னணுக் கழிவுகளை அழிப்பதற்கும் , மறு சுழற்சி செய்வதற்கும், மேலாண்மை செய்வதற்கும் வழிகாட்டுதல் அளித்திட வேண்டும்.

மின்னணுக் கழிவுகளை பாதுகாப்பான முறையில் அகற்றவும், மறு சுழற்சி செய்யவும், அதில் உள்ள உலோகப் பொருட்களை பிரித்தெடுப்பதற்கும், அந்தப் பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு பயிற்சியும், விழிப்புணர்வும் கிடைக்கச் செய்திட வேண்டும்.

மின்னணுக் கழிவுகளை அழிப்பதற்கும், மறு சுழற்சி செய்வதற்கும், மேலாண்மை செய்வதற்கும் மத்திய , மாநில அரசுகள் அதிக நிதி ஒதுக்கிட வேண்டும்.

மின்னணுக் கழிவுகள் பிற நாடுகளிலிருந்த கடத்தி வரப்படுகிறதா? என்பதை நாட்டு எல்லைகளிலும், கடலோரங்களிலும் தீவரமாக கண் காணித்திட வேண்டும்

மின்னணுக் கழிவுகளை அழிப்பதற்கும், மறு சுழற்சி செய்வதற்கும் தயாரிப்பாளர்களே முழு பொறுப்பாக்கப்பட வேண்டும்.

மின்னணுக் கழிவுகளை அகற்றவும், அழிக்கவும் பொது அமைப்புகள், தனியார் நிறுவனங்கள் , தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும்.

மின்னணுக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டுபவர்களுக்கும், மறு சுழற்சி செய்யாதவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட வேண்டும்.

மின்னணுப் பொருட்கள் தயாரிப்புகளில், மிகவும் அதிக நச்சுத் தன்மை கொண்ட காரீயம், பாதரசம், காட்மியம், குரோமியம் முதலிய உலோகங்கள் பயன்படுத்துவதை குறைத்திட வேண்டும்.

பழைய மின்னணுப் பொருட்களை கொடுத்து, புதிய பொருட்கள் வாங்குபவர்களை ஊக்குவிக்க வேண்டும். அதற்கு ஊக்கத் தொகை வழங்கிட வேண்டும். பழைய மின்னணுப் பொருட்கள் சேகரிப்பு மையங்களை அரசு அமைத்திட வேண்டும்.

மின்னணுக் கழிவுகளை மறு சுழற்சி செய்திடவும், அழித்திடவும் உள்ளாட்சி மற்றும் நகராட்சி அமைப்புகளை ஈடுபடுத்திட வேண்டும்.

காரீயம் இல்லாத மின்னணு பொருட்கள், மறு சுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த மக்களை ஊக்குவிக்க வேண்டும்.

மத்திய அரசு வெளிநாடுகளிலிருந்து எந்த முறையிலும் மின்னணுக் கழிவுகளை இறக்குமதி செய்யப்படுவதை முற்றும் தடை செய்திட வேண்டும்.

கல்வி நிறுவனங்கள், நூல் நிலையங்கள், அறக்கட்டளைகள், சமுதாய நல வளர்ச்சி நிறுவனங்கள், மருத்துவமனைகள் முதலியவற்றிற்கு, வெளிநாடுகளிலிருந்து பயன்படுத்தப்பட்ட மின்னணுப் பொருட்களை இறக்குமதி செய்யக் கூடாது என மத்திய அரசு 13-05-2010 அன்று முதல் தடை விதித்துள்ளதை தீவிரமாக அமல்படுத்த வேண்டும்.

பெங்களுருக்கு அருகில் அமைக்கப்பட்டு உள்ள மின்னணுக் கழிவுகள் மறுசுழற்சி பணிமனையைப் போல் பிற இடங்களிலும் அமைத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் .

மின்னணுக் கழிவுகள் குறித்து விழிப்புணர்வை பொது மக்களிடம் ஏற்படச் செய்திட வேண்டும். மின்னணுப் பொருட்கள் விற்பனை பொருட்காட்சிகள் நடத்திட விதிமுறைகள் கடுமையாக்கப் பட வேண்டும். மின்னணுக் கழிவுகளை கட்டுப்படுத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும். மின்னணுக் கழிவுகளை சுத்தப்படுத்தும் தொழிலில் ஈடுபடுபவர்களை முறைப்படுத்த, பாதுகாத்திட முறையான சட்டம் இயற்றப்பட வேண்டும்.


பழைய பிளாஸ்டிக் பாட்டிலை உபயோகித்து நெல் நாற்றாங்கால் தயாரித்தல்

காலியான தேவையற்ற 2 லிட்டர் கொள்ளளவு கொண்ட பாட்டிலை, நீள் வாட்டத்தில் வெட்டி, நெல் நாற்றை வளர்பதற்கு உபயோகப்படுத்தலாம்.

பாட்டிலின் இந்த பாதி பகுதியை, வண்டல் மண், மண்புழு உரம் மற்றும் நெல் உமியை 3:2:1 விகித கலவையை கொண்டு நிரப்ப வேண்டும். தோராயமாக, ஒரு பாதி பாட்டிலுக்கு, 300 கிராம் கலவை தேவைப்படும்.
அமிர்தகரைசல் /பிஜாமிர்த்துடன் (இயற்கை உரங்கள்) நேர்த்தி செய்யப்பட்ட விதையை இந்த பாட்டிலில் உள்ள படுக்கையில் விதைக்க வேண்டும். ஒவ்வொரு படுக்கையிலும், 10 கிராம் விதையை விதைக்க வேண்டும்.

இரண்டு நாட்களுக்கு ஒரு முறை, நீர் ஊற்றி விதை படுக்கைகளை ஈரப்பதத்துடன் வைத்திருக்க வேண்டும்.

நாற்றுகள், பத்து தினங்களில், நடுவதற்கு தயாராகிவிடும். ஒரு ஹெக்கடரில் நடுவதற்கு, பின்வருபவை தேவையானவை;

- காலிபாட்டில் எண்ணிக்கை
(பாதியாக வெட்டப்பட்டவை) - 625
- விதை - 6.3 கிலோ
- வண்டல் மண் - 93.8 கிலோ
- மண்புழுஉரம் - 62.5 கிலோ
- சாம்பல் - 31 கிலோ
- தயாராகும் நாற்றுகள் - 2,00,000

இந்த முறையை, நகரத்தின் அருகாமையில் உள்ள கிராமங்களில் இடம் மற்றும் வேலையாட்கள் நெருக்கடியான தருணத்தில் உபயோகிக்கலாம்.

- திரு. சஞ்சய் பயேல்,ஜவகர் தல், தானே

மூலம்: இயற்கை சாகுபடி முறைகள்,
தொழில்நுட்ப கூட்டுறவு திட்டம்,FAO, நியுடெல்லி மற்றும் NCOF , காசியாபாத்.
தயாரித்தது: மகாராஷ்டிர இயற்கை விவசாய குழு (MOFF)

பாதுகாக்கப்படுமா புவி?

இந்த உலகம் எப்படி உருவானது என்பதற்கு பல்வேறு காரணங்களை விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் கூறுகின்றனர். அதே போல் புவி தினம் உருவானதற்கும் ஒரு வரலாறு இருக்கிறது. இன்றைய தினம் கொண்டாடப்படும் இந்த புவி தினம், 1970-ம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

தொடக்கத்தில் ஒரு சில இடங்களில் நடத்தப்பட்ட புவி தினக் கடைப்பிடிப்பு, இன்று உலகெங்கும் 140-க்கும் அதிகமான நாடுகளில் கொண்டாடப்படுகிறது. புவி தினம் உருவான வரலாறையும், அதன் வளர்ச்சியையும் பற்றிய விவரம்:-

புவியின் பாதுகாப்பையும், அதன் வளத்தையும் மேம்படுத்தும் நோக்கில் புவி தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 22-ம் தேதி கொண்டாடப்படுகிறது. சான் பிரான்சிஸ்கோவில் கடந்த 1969-ம் ஆண்டு நடைபெற்ற யுனெஸ்கோ மாநாட்டில், ஜான் மகொநெல் என்பவர் பூமிக்கென்று ஒரு தினம் உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்தினார்.

குறிப்பாக, பூமியின் வடக்கு கோளத்தில் வசந்த காலம் தொடங்கும் மார்ச் 21-ம் தேதியை, புவி தினமாக கொண்டாடலாம் என்றும் யோசனை கூறினார்.இதனை அப்போதைய ஐ.நா பொது செயலாளரும் ஏற்றுக் கொண்டார். ஆனால், தற்போது கொண்டாடப்படும் புவி தினத்தின் காரணகர்த்தா ஆகக் கருதப்படுபவர் டெனிஸ் ஹேய்ஸ்.

1970-ம் ஆண்டு கொலம்பியா பல்கலைக்கழகத்தில் கூடிய மாணவர் குழு ஒன்று டெனிஸ் ஹேய்ஸ்ன் புவி தினக் கொண்டாட்டம் தொடர்பான திட்டங்களை கேட்டறிந்தது. இதையடுத்து நியூயார்க் நகரில் முதலாவது புவி தினம் கொண்டாட திட்டமிட்டது.சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்ற இந்த புவி தினத்தை பல முன்னணி தொலைக்காட்சி செய்தி நிறுவனங்கள் ஒளிபரப்பின. அதே காலகட்டத்தில் பிலடெல்பியா நகரின் ஃபர்மவுண்ட் பூங்காவில் புவி தினம் கொண்டாடப்பட்டது.

அதன் பின்னர் வெவ்வேறு கால கட்டங்களில் புவி தினம் கொண்டாடப்பட்ட நிலையில், 20-ம் ஆண்டு கொண்டாட்டங்கள் உலகின் கவனத்தை பெரிதும் ஈர்த்தன. சுமார் 141 நாடுகளில், 2 கோடி மக்களை ஒன்று திரட்டி நடத்தப்பட்ட 1990-ம் ஆண்டு புவி தினக் கொண்டாட்டம், ரியோ டி ஜெனிரோவில் 1992-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.நா. பூமி மாநாட்டிற்கு பெரும் தூண்டுகோலாக இருந்தது.

இதேபோல் புத்தாயிரமாவது ஆண்டில் நடந்த புவி தினம் கொண்டாட்டத்தில் 5 ஆயிரம் சுற்றுச்சூழல் அமைப்புகள் ஒருங்கிணைந்து, 183 நாடுகளில் பூமியை பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தின. இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக கடந்த 2007-ம் ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி கொண்டாடப்பட்ட புவி தினத்தில் உலகெங்கும் ஒரு கோடி பேர் பங்கேற்றனர்.

இதன் எதிரொலியாக 2009-ம் ஆண்டு, புவி தினத்தை, சர்வதேச பூமி அன்னை தினமாக கடைப்பிடிக்கப்படும் என ஐ.நா. சபை தீர்மானம் நிறைவேற்றி அறிவித்தது. பூமியும் அதன் சுற்றுச்சூழல் அமைவு ஆகியவையே மனிதர்களின் வீடுகள். எனவே, பூமியை இயற்கையுடன் ஒருங்கிணைப்பது அவசியம் என்று அந்த தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது.

தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் ரசாயனக் கழிவுகள், வாகனப் புகை, ரசாயன உரங்கள், அணு ஆயுத சோதனை என பல்வேறு வழிகளில் பூமித் தாயின் பூவுடலை, கொஞ்சம் கொஞ்சமாக சேதப்படுத்திய நாம், இனியேனும், அந்த பூமித் தாயை பாதுகாக்க வேண்டும் என்ற சூளூரையை, இந்தப் புவி தினத்தில் ஏற்போம்.

புவி தினத்தின் அவசியம்:-

சூரியக் குடும்பத்தில் நாம் வாழும் பூமிதான் மிகவும் அற்புதமானது. உயிரினங்கள் வாழும் ஒரே கோளும் நம் பூமிதான். மனிதனையும் சேர்த்து தற்போது 10 கோடி வகை உயிரினங்கள் புவியில் வாழ்கின்றன. பூமி உருவானதில் இருந்து இன்று வரை ஏராளமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இயற்கை நிகழ்வுகள் மற்றும் பேரழிவுகளால், பூமியின் தோற்றம் மாற்றம் கண்டுள்ளது.

இந்த மாற்றங்களால் நன்மைகளும், தீமைகளும் மாறி மாறி ஏற்பட்டுள்ளன. மனிதன் உருவான பின்னர் தான் புவியின் அழிவு ஆரம்பித்ததாக கூறப்படுகிறது. இதற்கு ஏராளமான ஆதாரங்களும் உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

முக்கியமாக நாம் பயன்படுத்தும் ஏராளமான செயற்கைப் பொருட்கள், நமது செயல்பாடுகளும் பூமியின் முகத்தோற்றத்தை அடியோடு மாற்றி வருகின்றன. அவற்றில் முக்கியமானவை, நமது பொருளாதாரத் தேவைகளுக்காக காடுகளை அழிப்பதும், நமது சுய லாபத்திற்காக பூமியை அளவுக்கு அதிகமாக மாசுபடுத்துவதும்தான்.

உலகின் நுரையீரல்களாக கருதப்படும் தாவரங்களை, தனது தேவைக்காக மனிதன் அழித்ததன் எதிரொலியாகவே புவி வெப்பமடைகிறது எனவும் ஆய்வாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

புவிக்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கும் அழிவை தடுக்க பூமியை காக்க வேண்டும்..அதன் இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை உலக மக்களிடையே ஏற்படுத்தவே உருவாக்கப்பட்டது தான் புவி தினம்.

மனிதர்கள் ஏற்படுத்திய பாதிப்புகளால் புவி வெப்பமடைந்து, துருவப் பகுதிகளில் உள்ள பனிப் பிரதேசங்கள் வேகமாக உருகி வருகின்றன. இதன் எதிரொலியாக கடல் மட்டம் உயர்கிறது, நிலப் பகுதிகளும் மூழ்கும் அபாயம் உருவாகியுள்ளது.

இந்தச் சுற்றுச்சூழல் சீர்கேடுகளுக்கு மனிதர்களே முழுமுதற் காரணம் என்பதால், புவியை பாதுகாக்கும் பொறுப்பும், கடமையும் நமக்கே இருக்கிறது. அதற்காக உருவாக்கப்பட்ட இந்த புவி தினத்தில், பூமியைக் காப்பாற்ற நம்மால் ஆன சிறிய முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

உதாரணமாக, வீடுகளில் வெப்பத்தை உமிழும் குண்டு பல்புகளுக்கு பதிலாக டியூப் லைட் அல்லது மின்சாரத்தை குறைவாக பயன்படுத்தும் சிஎப்எல் பல்புகளைப் பயன்படுத்தலாம்.மின்சாரம் தயாரிப்பதற்கு அதிகளவில் தற்போது நிலக்கரியும், அணு உலையும் பயன்படுத்தப்படுகின்றன.

இதில் நிலக்கரி இயற்கை வளமாகும். அதை அளவுக்கு அதிகமாக சில நாடுகள் சுரண்டுவதாலும், புவி வெப்பமடைகிறது. எனவே, தேவை இல்லாத போது மின் உபகரணங்களை அணைத்து வைக்க வேண்டியது அவசியம்.

அதே போல் சுத்தமான பிராணவாயு கிடைக்க வீடுகளில் மரம் வளர்ப்பது அவசியம் என்பதையும் நாம் உணர வேண்டும். இயற்கையின் கொடையில் முக்கியமானதாக கருதப்படும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். மரங்களை அழித்து காகிதங்கள் உருவாக்கப்படுவதால், அவற்றைப் பயன்படுத்துவதிலும் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

இறுதியாக, புவி வெப்பத்திற்கு முக்கிய காரணமாக கருதப்படுவது ஓசோன் படலத்தில் விழும் ஓட்டைகள் தான். இந்தப் படலம் சேதமடைவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக வாகனங்களில் இருந்து வெளியேற்றப்படும் புகை திகழ்கிறது. எனவே, தனி வாகனங்கள் பயன்படுத்துவதைக் குறைத்து ரயில், பேருந்து போன்ற பொது வாகனங்களை பயன்படுத்துவதன் மூலம் புவி வெப்பத்தை நாமும் தடுக்க முடியும்.

நாம் பூமிக்கு ஏற்படுத்திய பாதிப்புகளை போக்க என்ன செய்யலாம்? தனி மனிதராக நாம் எப்படி உதவலாம்? போன்றவற்றை பற்றிய விவரங்கள்:-

* புதை படிவ எரிபொருள் உபயோகத்தை கட்டுப்படுத்தி, புதுப்பிக்கத்தக்க சக்திகளான காற்றாலை, சூரிய ஓளி திட்டங்களை செயல்படுத்தலாம். இதனால் கரியமில வாயுவினால் ஏற்படும் பாதிப்பு வெகுவாக குறைகிறது. வீட்டளவிலும் இதுபோன்ற திட்டங்களை தேவைக்கேற்ப நிறுவலாம்.மேலும் குறைந்த அளவு மின்சாரமே தேவைப்படும் சிஎப்எல் பல்புகளை பயன்படுத்தலாம்.

* குப்பைகளை குறைப்பதால் மீதேன் உள்ளிட்ட ஆபத்தான வாயுக்களின் வெளியேற்றம் தடுக்கப்படுகிறது. ஒவ்வொரு வீட்டிலிருந்தும் 10 சதவீதம் வரை வாயு வெளியேற்றத்தை குறைக்க முடியும். நம் வாழ்வியல் முறையில் மாற்றங்கள் கொண்டு வந்து, கூடிய அளவுக்கு மறுசுழற்சி செய்யலாம். இதனால் தேவைகள் குறைவதோடு அவற்றை தயாரிப்பதற்கான எரிபொருளும், சக்தியும் பாதுகாக்கப்படுகின்றன.

* ஒவ்வொரு முறை தண்ணீரை சுத்திகரிக்கும் போதும், விநியோகிக்கும் போதும் அதிகளவில் ஆற்றல் வீணடிக்கப்படுகிறது. சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்துவதோடு, சேமிக்கும் வழிகளையும் யோசிக்கலாம்..மழை நீரை சேமிப்பதில் அனைவரும் ஆர்வம் காட்டினால் வியத்தகு மாற்றங்கள் ஏற்படும்.

* வீடுகளை வெப்பத்திலிருந்து காத்துக்கொள்ள, சுவர்களுக்கு பாதுகாப்பு பூச்சு, ஜன்னல்களுக்கு பருவநிலை காக்கும் கண்ணாடி என பல நவீன அம்சங்களை சேர்த்துக்கொள்ளலாம்.இதன் காரணமாக அதிக வெப்பத்தை வெளியேற்றும் குளிர்சாதன கருவிகளை எல்லா நேரங்களிலும் உபயோகிப்பதை தவிர்க்கலாம்.

* அருகாமையிலுள்ள இடங்களுக்கு நடந்தோ, மிதிவண்டியிலோ செல்லலாம். தேவைப்படும் நேரங்களில் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த எண்ணலாம். வாகனத்தை இயக்குவதாக இருந்தாலும், அது நல்ல நிலையில் இருக்கிறதா என்பதை உறுதி செய்யவேண்டும். வாகனங்களாலும் அதிகளவில் எரிபொருள் வீணடிக்கப்படலாம்.

* தேவைப்படும் நேரங்களை தவிர பிற நேரங்களில் மின்சாரம் பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.

* பல வகை மாசினால் மூச்சு திணறி கொண்டிருக்கும் பூமிக்கு பிராணவாயுவை கூட்டவும், ஏற்படுத்தப்பட்டுள்ள பாதிப்புகளிலிருந்து நம்மை பெருமளவு காப்பாற்றவும் தேவைப்படுவது மரங்கள்.நிழல் தரும் மரங்கள் வளர்ந்தால், பூமி சற்றே இளைப்பாறும்.

தகவல்: புதிய தலைமுறை

இந்த உலகம் எப்படி உருவானது என்பதற்கு பல்வேறு காரணங்களை விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் கூறுகின்றனர். அதே போல் புவி தினம் உருவானதற்கும் ஒரு வரலாறு இருக்கிறது. இன்றைய தினம் கொண்டாடப்படும் இந்த புவி தினம், 1970-ம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

தொடக்கத்தில் ஒரு சில இடங்களில் நடத்தப்பட்ட புவி தினக் கடைப்பிடிப்பு, இன்று உலகெங்கும் 140-க்கும் அதிகமான நாடுகளில் கொண்டாடப்படுகிறது. புவி தினம் உருவான வரலாறையும், அதன் வளர்ச்சியையும் பற்றிய விவரம்:-

புவியின் பாதுகாப்பையும், அதன் வளத்தையும் மேம்படுத்தும் நோக்கில் புவி தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 22-ம் தேதி கொண்டாடப்படுகிறது. சான் பிரான்சிஸ்கோவில் கடந்த 1969-ம் ஆண்டு நடைபெற்ற யுனெஸ்கோ மாநாட்டில், ஜான் மகொநெல் என்பவர் பூமிக்கென்று ஒரு தினம் உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்தினார்.

குறிப்பாக, பூமியின் வடக்கு கோளத்தில் வசந்த காலம் தொடங்கும் மார்ச் 21-ம் தேதியை, புவி தினமாக கொண்டாடலாம் என்றும் யோசனை கூறினார்.இதனை அப்போதைய ஐ.நா பொது செயலாளரும் ஏற்றுக் கொண்டார். ஆனால், தற்போது கொண்டாடப்படும் புவி தினத்தின் காரணகர்த்தா ஆகக் கருதப்படுபவர் டெனிஸ் ஹேய்ஸ்.

1970-ம் ஆண்டு கொலம்பியா பல்கலைக்கழகத்தில் கூடிய மாணவர் குழு ஒன்று டெனிஸ் ஹேய்ஸ்ன் புவி தினக் கொண்டாட்டம் தொடர்பான திட்டங்களை கேட்டறிந்தது. இதையடுத்து நியூயார்க் நகரில் முதலாவது புவி தினம் கொண்டாட திட்டமிட்டது.சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்ற இந்த புவி தினத்தை பல முன்னணி தொலைக்காட்சி செய்தி நிறுவனங்கள் ஒளிபரப்பின. அதே காலகட்டத்தில் பிலடெல்பியா நகரின் ஃபர்மவுண்ட் பூங்காவில் புவி தினம் கொண்டாடப்பட்டது.

அதன் பின்னர் வெவ்வேறு கால கட்டங்களில் புவி தினம் கொண்டாடப்பட்ட நிலையில், 20-ம் ஆண்டு கொண்டாட்டங்கள் உலகின் கவனத்தை பெரிதும் ஈர்த்தன. சுமார் 141 நாடுகளில், 2 கோடி மக்களை ஒன்று திரட்டி நடத்தப்பட்ட 1990-ம் ஆண்டு புவி தினக் கொண்டாட்டம், ரியோ டி ஜெனிரோவில் 1992-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.நா. பூமி மாநாட்டிற்கு பெரும் தூண்டுகோலாக இருந்தது.

இதேபோல் புத்தாயிரமாவது ஆண்டில் நடந்த புவி தினம் கொண்டாட்டத்தில் 5 ஆயிரம் சுற்றுச்சூழல் அமைப்புகள் ஒருங்கிணைந்து, 183 நாடுகளில் பூமியை பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தின. இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக கடந்த 2007-ம் ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி கொண்டாடப்பட்ட புவி தினத்தில் உலகெங்கும் ஒரு கோடி பேர் பங்கேற்றனர்.

இதன் எதிரொலியாக 2009-ம் ஆண்டு, புவி தினத்தை, சர்வதேச பூமி அன்னை தினமாக கடைப்பிடிக்கப்படும் என ஐ.நா. சபை தீர்மானம் நிறைவேற்றி அறிவித்தது. பூமியும் அதன் சுற்றுச்சூழல் அமைவு ஆகியவையே மனிதர்களின் வீடுகள். எனவே, பூமியை இயற்கையுடன் ஒருங்கிணைப்பது அவசியம் என்று அந்த தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது.

தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் ரசாயனக் கழிவுகள், வாகனப் புகை, ரசாயன உரங்கள், அணு ஆயுத சோதனை என பல்வேறு வழிகளில் பூமித் தாயின் பூவுடலை, கொஞ்சம் கொஞ்சமாக சேதப்படுத்திய நாம், இனியேனும், அந்த பூமித் தாயை பாதுகாக்க வேண்டும் என்ற சூளூரையை, இந்தப் புவி தினத்தில் ஏற்போம்.

புவி தினத்தின் அவசியம்:-

சூரியக் குடும்பத்தில் நாம் வாழும் பூமிதான் மிகவும் அற்புதமானது. உயிரினங்கள் வாழும் ஒரே கோளும் நம் பூமிதான். மனிதனையும் சேர்த்து தற்போது 10 கோடி வகை உயிரினங்கள் புவியில் வாழ்கின்றன. பூமி உருவானதில் இருந்து இன்று வரை ஏராளமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இயற்கை நிகழ்வுகள் மற்றும் பேரழிவுகளால், பூமியின் தோற்றம் மாற்றம் கண்டுள்ளது.

இந்த மாற்றங்களால் நன்மைகளும், தீமைகளும் மாறி மாறி ஏற்பட்டுள்ளன. மனிதன் உருவான பின்னர் தான் புவியின் அழிவு ஆரம்பித்ததாக கூறப்படுகிறது. இதற்கு ஏராளமான ஆதாரங்களும் உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

முக்கியமாக நாம் பயன்படுத்தும் ஏராளமான செயற்கைப் பொருட்கள், நமது செயல்பாடுகளும் பூமியின் முகத்தோற்றத்தை அடியோடு மாற்றி வருகின்றன. அவற்றில் முக்கியமானவை, நமது பொருளாதாரத் தேவைகளுக்காக காடுகளை அழிப்பதும், நமது சுய லாபத்திற்காக பூமியை அளவுக்கு அதிகமாக மாசுபடுத்துவதும்தான்.

உலகின் நுரையீரல்களாக கருதப்படும் தாவரங்களை, தனது தேவைக்காக மனிதன் அழித்ததன் எதிரொலியாகவே புவி வெப்பமடைகிறது எனவும் ஆய்வாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

புவிக்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கும் அழிவை தடுக்க பூமியை காக்க வேண்டும்..அதன் இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை உலக மக்களிடையே ஏற்படுத்தவே உருவாக்கப்பட்டது தான் புவி தினம்.

மனிதர்கள் ஏற்படுத்திய பாதிப்புகளால் புவி வெப்பமடைந்து, துருவப் பகுதிகளில் உள்ள பனிப் பிரதேசங்கள் வேகமாக உருகி வருகின்றன. இதன் எதிரொலியாக கடல் மட்டம் உயர்கிறது, நிலப் பகுதிகளும் மூழ்கும் அபாயம் உருவாகியுள்ளது.

இந்தச் சுற்றுச்சூழல் சீர்கேடுகளுக்கு மனிதர்களே முழுமுதற் காரணம் என்பதால், புவியை பாதுகாக்கும் பொறுப்பும், கடமையும் நமக்கே இருக்கிறது. அதற்காக உருவாக்கப்பட்ட இந்த புவி தினத்தில், பூமியைக் காப்பாற்ற நம்மால் ஆன சிறிய முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

உதாரணமாக, வீடுகளில் வெப்பத்தை உமிழும் குண்டு பல்புகளுக்கு பதிலாக டியூப் லைட் அல்லது மின்சாரத்தை குறைவாக பயன்படுத்தும் சிஎப்எல் பல்புகளைப் பயன்படுத்தலாம்.மின்சாரம் தயாரிப்பதற்கு அதிகளவில் தற்போது நிலக்கரியும், அணு உலையும் பயன்படுத்தப்படுகின்றன.

இதில் நிலக்கரி இயற்கை வளமாகும். அதை அளவுக்கு அதிகமாக சில நாடுகள் சுரண்டுவதாலும், புவி வெப்பமடைகிறது. எனவே, தேவை இல்லாத போது மின் உபகரணங்களை அணைத்து வைக்க வேண்டியது அவசியம்.

அதே போல் சுத்தமான பிராணவாயு கிடைக்க வீடுகளில் மரம் வளர்ப்பது அவசியம் என்பதையும் நாம் உணர வேண்டும். இயற்கையின் கொடையில் முக்கியமானதாக கருதப்படும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். மரங்களை அழித்து காகிதங்கள் உருவாக்கப்படுவதால், அவற்றைப் பயன்படுத்துவதிலும் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

இறுதியாக, புவி வெப்பத்திற்கு முக்கிய காரணமாக கருதப்படுவது ஓசோன் படலத்தில் விழும் ஓட்டைகள் தான். இந்தப் படலம் சேதமடைவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக வாகனங்களில் இருந்து வெளியேற்றப்படும் புகை திகழ்கிறது. எனவே, தனி வாகனங்கள் பயன்படுத்துவதைக் குறைத்து ரயில், பேருந்து போன்ற பொது வாகனங்களை பயன்படுத்துவதன் மூலம் புவி வெப்பத்தை நாமும் தடுக்க முடியும்.

நாம் பூமிக்கு ஏற்படுத்திய பாதிப்புகளை போக்க என்ன செய்யலாம்? தனி மனிதராக நாம் எப்படி உதவலாம்? போன்றவற்றை பற்றிய விவரங்கள்:-

* புதை படிவ எரிபொருள் உபயோகத்தை கட்டுப்படுத்தி, புதுப்பிக்கத்தக்க சக்திகளான காற்றாலை, சூரிய ஓளி திட்டங்களை செயல்படுத்தலாம். இதனால் கரியமில வாயுவினால் ஏற்படும் பாதிப்பு வெகுவாக குறைகிறது. வீட்டளவிலும் இதுபோன்ற திட்டங்களை தேவைக்கேற்ப நிறுவலாம்.மேலும் குறைந்த அளவு மின்சாரமே தேவைப்படும் சிஎப்எல் பல்புகளை பயன்படுத்தலாம்.

* குப்பைகளை குறைப்பதால் மீதேன் உள்ளிட்ட ஆபத்தான வாயுக்களின் வெளியேற்றம் தடுக்கப்படுகிறது. ஒவ்வொரு வீட்டிலிருந்தும் 10 சதவீதம் வரை வாயு வெளியேற்றத்தை குறைக்க முடியும். நம் வாழ்வியல் முறையில் மாற்றங்கள் கொண்டு வந்து, கூடிய அளவுக்கு மறுசுழற்சி செய்யலாம். இதனால் தேவைகள் குறைவதோடு அவற்றை தயாரிப்பதற்கான எரிபொருளும், சக்தியும் பாதுகாக்கப்படுகின்றன.

* ஒவ்வொரு முறை தண்ணீரை சுத்திகரிக்கும் போதும், விநியோகிக்கும் போதும் அதிகளவில் ஆற்றல் வீணடிக்கப்படுகிறது. சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்துவதோடு, சேமிக்கும் வழிகளையும் யோசிக்கலாம்..மழை நீரை சேமிப்பதில் அனைவரும் ஆர்வம் காட்டினால் வியத்தகு மாற்றங்கள் ஏற்படும்.

* வீடுகளை வெப்பத்திலிருந்து காத்துக்கொள்ள, சுவர்களுக்கு பாதுகாப்பு பூச்சு, ஜன்னல்களுக்கு பருவநிலை காக்கும் கண்ணாடி என பல நவீன அம்சங்களை சேர்த்துக்கொள்ளலாம்.இதன் காரணமாக அதிக வெப்பத்தை வெளியேற்றும் குளிர்சாதன கருவிகளை எல்லா நேரங்களிலும் உபயோகிப்பதை தவிர்க்கலாம்.

* அருகாமையிலுள்ள இடங்களுக்கு நடந்தோ, மிதிவண்டியிலோ செல்லலாம். தேவைப்படும் நேரங்களில் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த எண்ணலாம். வாகனத்தை இயக்குவதாக இருந்தாலும், அது நல்ல நிலையில் இருக்கிறதா என்பதை உறுதி செய்யவேண்டும். வாகனங்களாலும் அதிகளவில் எரிபொருள் வீணடிக்கப்படலாம்.

* தேவைப்படும் நேரங்களை தவிர பிற நேரங்களில் மின்சாரம் பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.

* பல வகை மாசினால் மூச்சு திணறி கொண்டிருக்கும் பூமிக்கு பிராணவாயுவை கூட்டவும், ஏற்படுத்தப்பட்டுள்ள பாதிப்புகளிலிருந்து நம்மை பெருமளவு காப்பாற்றவும் தேவைப்படுவது மரங்கள்.நிழல் தரும் மரங்கள் வளர்ந்தால், பூமி சற்றே இளைப்பாறும்.

தகவல்: புதிய தலைமுறை

வீட்டில் உருவாக்கலாம் குப்பை மாற்றுத் தொழிற்சாலை

நாட்டில் குப்பை பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குப்பையில் இருந்து மின்சாரம் மற்றும் உரம் தயாரிக்கும் குப்பை மாற்று திட்டத்தை செயல்படுத்த, நமது அரசு இன்னும் முயன்று கொண்டே இருக்கிறது வருகிறது. மக்கும் குப்பை, மக்கா குப்பை தொட்டிகள் வைத்து, இப்படித்தான் குப்பையைபோடணும் என்றாலும் அதையும் சரியாக செய்வதில்லை மக்கள்.

அரசு செய்யும் என்று காத்திருக்காமல் தனிமனிதன் ஒவ்வொருவரும் தன்னால் முடிந்த அளவு குப்பையை மறு சுழற்சி செய்ய முயல வேண்டும். எப்படி செய்வது என கேட்கிறீர்களா இதோ சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த, சிவசுப்ரமணியன் என்பவர், 2003ம் ஆண்டு முதல், வீட்டு குப்பையை, தெரு தொட்டியில் போடாமல், "வெர்மிக் கம்போசிங்' முறையை கையாண்டு, குப்பையை மறுசுழற்சி செய்து வருகிறார்.

எப்படி செய்வது?

*மொத்தம், 200 லி., கொள்ளளவு கொண்ட, ஒரு டிரம் தயார் செய்ய வேண்டும்.

*அதன் அடிப்பகுதியின் நடுவில், வட்டமாக ஒரு திறப்பையும், அதற்கான மூடியையும் உருவாக்க வேண்டும்.

*அதன் வாய் பகுதி அருகில், பக்கவாட்டில், ஒரு திறப்பை தயார் செய்ய வேண்டும்.

*வீட்டின் வசதியான மண் தரையில், டிரம்மின் விட்டம் அளவுக்கு, அரை அடி மண் சமப்படுத்தி, அதன் மீது, வைக்கோலும் மாட்டு சாணமும் கலந்த கலவையை இட வேண்டும்.

*அதற்கு மேல், அரை அடி மண் போட வேண்டும்.

*இப்படி தயார் செய்யப்பட்ட மண் தரையின் மீது, டிரம்மை தலைகீழாக கவிழ்த்து வைக்க வேண்டும்.

*டிரம்மின் மேல் பகுதியில் உள்ள திறப்பின் வழியாக, உணவு கழிவு, காய்கறி கழிவு போன்ற மக்கும் குப்பையை உள்ளே போட்டு, அதன் மீது ஒரு கைப்பிடி மண்ணையும் தூவ வேண்டும்.
*வைக்கோல், மாட்டு சாண கலவையில், ஐந்து நாட்களில் புழு உற்பத்தியாகி, மக்கும் குப்பையை உண்டு, அவற்றை உரமாக்கி விடும்.
*மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, டிரம்மின் கீழ் திறப்பின் வழியாக, மண் உரத்தை எடுத்து
தாவரங்களுக்கு பயன்படுத்தலாம்.
குப்பை உரமாகும்:

இதுகுறித்து, சிவசுப்ரமணியன் கூறியதாவது:என் வீட்டில், மூன்று சின்ன குப்பை தொட்டிகள் வைத்துள்ளேன். ஒன்றில், காய்கறி மற்றும் உணவு கழிவு, இரண்டாவதில், பால் கவர், சாக்லெட் கவர் மற்றும் இதர பிளாஸ்டிக் பொருட்கள், மூன்றாவது தொட்டியில், பொட்டல காகிதம், பேக்கரி அட்டை போன்ற காகித கழிவுகளை சேகரித்து வைப்பேன். மக்கும் குப்பையை, தினமும் மாலையில் டிரம்மில் போட்டு, மேலே ஒரு கைபிடி மண் தூவுவேன். சில நாட்களில் அது உரமாக மாறிவிடும். மூன்று மாதத்திற்கு ஒரு முறை, அந்த உரத்தை எடுத்து, செடிகள், தென்னை மரத்திற்கு உரமாக பயன்படுத்துவேன். இந்த மறு சுழற்சியில், டிரம்மில் பாதிக்கு மேல் குப்பை தேங்காது என்பது குறிப்பிடத்தக்கது.

சமூகத்திற்கு கெடுதல் இல்லை:

மீதமுள்ள இரண்டு தொட்டியில், சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் மற்றும் பழைய தாள்களை மாதம் ஒரு முறை, பழைய பேப்பர் கடையில் இலவசமாக கொடுப்பேன்.இதை கடந்த, 10 ஆண்டுகளாக செய்து வருகிறேன். துவக்கத்தில் என் வீட்டில் கூட எதிர்ப்பு இருந்தது. நாளடைவில் அவர்களும் சேர்ந்து இந்த பணியை ஆர்வமுடன் செய்கின்றனர்.

என்னால், என் வீட்டினரால் இந்த சமூகத்திற்கு எந்த கெடுதலும் வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். இது, பெரிய வேலை ஒன்றும் கிடையாது. தினமும் நாம் செய்யும் வீட்டு வேலையில், இதுவும் ஒரு வேலை, அவ்வளவு தான். தினமும் இரண்டு நிமிடம் தான் செலவாகும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

இவருக்கு உறுதுணையாக இருக்கும் இவரது மனைவி உமாதேவி கூறியதாவது:

துவக்கத்தில், கணவரின் வற்புறுத்தலால் வேண்டா வெறுப்பாக செய்து வந்தேன். பள்ளிக்கரணை மற்றும் பெருங்குடி குப்பை கிடங்கில், திடீரென எரியும் குப்பை பற்றி பத்திரிகை மற்றும் தொலைக்காட்சியில் பார்த்து, நம்மால் தானே சுற்றுச்சூழல் கெடுகிறது என, கலங்கினேன். பின் நானே முழு மனதுடன், "வெர்மிக் கம்போசிங்' முறையை கையாண்டு வருகிறேன். இந்த நடைமுறை இப்போது, எனக்கு முழு சந்தோஷத்தை கொடுக்கிறது.இவ்வாறு, உமாதேவி கூறினார்.

'நம்மால் தான், சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என்ற விழிப்புணர்வு பொதுமக்களிடம் இல்லை. தொடர் விழிப்புணர்ச்சியை மாநகராட்சி ஏற்படுத்த வேண்டும். இலவசங்கள் வழங்குவதை குறைத்துவிட்டு, இதுபோல், வீட்டில் குப்பையை மறுசுழற்சி செய்கிறவர்களுக்கு அரசு வரிச்சலுகை வழங்கலாம். இதன் மூலம், சுற்றுச்சூழல் சீர்கேட்டில் இருந்து சமூகம் பாதுகாக்கப்படும்'
- சிவசுப்ரமணியன்
நன்றி:தினமலர்

குப்பையை சுகாதாரமான முறையில் மறுசுழற்சி செய்து சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என்று இன்றைய தினத்தில் உறுதி எடுப்போம்... பலரிடமும் இதனை பகிர்ந்துக் கொள்ளுங்கள், விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்..... 
நன்றி நண்பர்களே              



நன்றி :- தினமலர்

மின்சாரப் பிரச்சனை தீர நாமும் இதை பின்பற்றலாம் !


பழைய பேப்பர், புட்டிகள், குப்பைகள் கொடுத்துவிட்டு, மளிகைப் பொருட்கள் வாங்கலாம். "எங்கே?' என்று ஆவலாய் கேட்கிறீர்களா? இது, இங்கு அல்ல... ஸ்வீடன் நாட்டில், இந்த முறை அமலில் உள்ளது. 
அங்கு, ஒரு கோடி மக்கள் வசிக்கின்றனர். அவர்களிடமிருந்து, 1 கிலோ குப்பை பத்து ரூபாய் வீதம் விலைக்கு வாங்குகிறது. இப்படி பொதுமக்களிடம் இருந்து 45 லட்சம் டன் குப்பையைப் பெற்று, அதை மின்சக்தியாக மாற்றுகிறது அந்நாடு.

இதன் மூலம், இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் வீடுகளுக்கு, மின்சக்தி வழங்கப்படுகிறது.
குப்பைகள் போதவில்லை என்று, வெளிநாட்டிலிருந்து எட்டு லட்சம் டன், குப்பை கழிவுகளை, இறக்குமதி செய்கிறது. இதில், நார்வே நாடு தான், டன் டன்னாக குப்பையை ஏற்றுமதி செய்கிறது. அதே போல, மெக்ஸிகோ நாட்டில், இரண்டு கோடி மக்கள் வசிக்கின்றனர்.

மக்களிடமிருந்து, குப்பை, பழைய பேப்பர், பிளாஸ்டிக் பொருட்கள், பழைய புட்டிகள் வாங்கப்படுகிறது. அதற்கு பதிலாக, காய்கறிகள் வாங்கிக் கொள்ளலாம். குப்பை பிரச்னையும் தீர்கிறது; மின்சாரமும் கிடைக்கிறது. நம் நாட்டிலும் இதைப் பின்பற்றினால், "கரன்ட் கட்' இருக்காதே!

புதன், 27 மார்ச், 2013

இயற்கை பயிர் வளர்ச்சி ஊக்கிகள்....




இயற்கை பயிர் வளர்ச்சி ஊக்கிகள்

முட்டை ரசம் - பயிர் வளர்ச்சி ஊக்கி

பிளாஸ்டிக் பாத்திரத்தில் பத்து முட்டைகளை குறுகிய முனை கீழிருக்குமாறு வைத்து அவைகள் மூழ்குமளவிற்கு எலுமிச்சை சாற்றினை விட வேண்டும். அதற்குப்பிறகு இருநூறு கிராம் வெல்லத்தை பூரிதக்கரைசலாக நீரில் கலந்து அப்பாத்திரத்தில் ஊற்றி மூடி வைத்துவிடவேண்டும். பத்து நாட்களுக்கு பிறகு திறந்து பார்த்தால் முட்டை கூழ் வடிவில் மாறிவிடும். இதைக்கையால் பிசைந்து மீண்டும் இருநூறு கிராம் வெல்லக்கரைசலை ஊற்றி பத்து நாட்கள் மூடி வைத்துவிட வேண்டும். அதன் திறந்து பார்த்தால் முட்டை ரசம் தயார். பிறகு அதை வடிகட்டி பத்து லிட்டர் டேங்குக்கு இருநூறு மில்லி வீதம் கலந்து தெளிக்கலாம். மிகச்சிறந்த பயிர் வளர்ச்சி ஊக்கியாகும்.

வேம்பு புங்கன் கரைசல் :

தேவையான பொருட்கள் :-
வேப்பெண்ணை ஒரு லிட்டர்
புங்கன் எண்ணை ஒரு லிட்டர்
கோமியம் (பழையது) பத்து லிட்டர்
காதி சோப்பு கரைசல் அரை லிட்டர்

இவை அனைத்தையும் கலந்து வைத்து ஒருநாள் கழித்து உபயோகிக்கலாம். இவை ஒரு ஹெக்டர் அளவுக்கானது. இது எல்லா வகை பயிர்களுக்கும் மிகச்சிறந்த பூச்சி விரட்டி.

மீன் அமினோ கரைசல் :

உணவுக்கு பயன்படாத மீன் கழிவுகளை வாங்கி வந்து அதனுடன் சம அளவு பனை வெல்லம் சேர்த்து பிசைந்து ஒரு பிளாஸ்டிக் ட்ரம்மில் காற்று புகாது வைக்க வேண்டும்
21 நாட்கள் களைத்து பார்த்தால் கரைசல் தயாராகிவிடும்
10 லிட்டருக்கு 100 மில்லி என்ற அளவில் வயலில் தெளிக்கலாம்.
இது ஒரு மிகச்சிறந்த பயிர் வளர்ச்சி ஊக்கி.
இதைப்பற்றி சுரபாலர் கூட விருட்ச சாஸ்திரத்தில் கூறியுள்ளார்.

பழக்காடி கரைசல்

தேவையான பொருட்கள்:
சாணம்-20 கிலோ,
கெட்டுப்போன பழங்களின் கூழ் - 5 முதல் 10 கிலோ
தொல்லுயிர் கரைசல்-50 கிலோ,
தண்ணீர்-50 லிட்டர்,
ஜீவாமிர்தம் -5-10 லிட்டர்.
தே மோர் (அ) அரப்புமோர் -5-10 லிட்டர்.

இவை அனைத்தும் கலந்து 5 முதல் 7 நாட்கள் நொதிக்கவிட வேண்டும்.
இதன் மூலம் நுண்ணுயிர்கள் பலமடங்கு பெருகும். மாதம் ஒருமுறை வீதம் 5 முறை பாசன நீரில் பழங்காடி கரைசலை சீராகக் கலந்து செல்லும் வகையில் பயன் படுத்த வேண்டும். இக்கரைசல் ஒரு மிகச்சிறந்த பயிர் ஊக்கியாகும்.


தேமோர் கரைசல்

புளித்த மோர் - 5 லி
இளநீர் - 1 லி

இவற்றை கேனில் ஊற்றவும். 10 தேங்காய்களின் துருவல், அழுகிய பழங்கள் 10 கிலோ இவற்றை சாக்கு பையில் பொட்டலம் போல் கட்டி அதில் போடவும். ஏழாம் நாளில் ஊறல் தயாராகி விடும்.
1 ஏக்கருக்கு 10 லிட்டர் தண்ணீரில் அரை லிட்டர் தேமோர் கரைசல் சேர்த்து தெளிக்கவும்.

பிராந்திக்கு பதில் அரப்பு மோர் கரைசல்

பல ஊர்களில் ஜிப்ராலிக் ஆசிட் கரைக்க மற்றும் பூச்சி மருந்துகளுடன் பிராந்தி கலந்து அடிப்பதாக செய்திகள் வருகிறது. இது மிகவும் வருந்தத்தக்கது.
இயற்கையாகவே ஜிப்ராலிக் ஆசிட் தயார் செய்து கொள்ளலாம்.
அரப்பு இலைத்தூள் ஒரு லிட்டர் படியில் அளந்து எடுத்துக்கொள்ளவும். இத்துடன் ஒரு லிட்டர் இளநீர், ஐந்து லிட்டர் புளித்த மோர் ஊற்றி கலக்கவேண்டும். இந்த கரைசலை பானையில் ஒரு வாரம் வைத்திருக்க வேண்டும். பிறகு பத்து லிட்டர் நீரில் இருநூறு மில்லி அரப்பு மோர் கரைசலை கலந்து வயலில் தெளிக்கலாம். இதனால் நல்லா மகசூல் கிடைக்கும். ஜிப்ராலிக் ஆசிட் மற்றும் பிராந்தி செலவு ஆயிரம் என்றால் இந்த கரைசலை தயாரிக்க ஐம்பது ரூபாய் போதும்..

நன்றி - விகடன்

இந்தியாவில் 2025ல் கடுமையான தண்ணீர் பஞ்சம் வரும் எச்சரிக்கை ரிப்போர்ட்.....




இந்தியாவில் 2025ல் கடுமையான தண்ணீர் பஞ்சம் வரும் எச்சரிக்கை ரிப்போர்ட்............!!

தண்ணீரின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால் 2025ம் ஆண்டு இந்தியாவில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.

தண்ணீரின் பொருட்டு உலக அளவில் எழும் பிரச்னைகளை ஆய்வு செய்து அவற்றுக்கு தீர்வு காணும் வகையில் இந்தாண்டை (2013) சர்வதேச தண்ணீர் ஒத்துழைப்பு ஆண்டாக ஐக்கிய நாடுகள் மன்றம் அறிவித்துள்ளது.

நீரின்றி அமையாது உலகு... இது வள்ளுவர் வாக்கு. இன்னொரு உலகப் போர் மூண்டால் அது தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது. அந்த அளவிற்கு தண்ணீரின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வரும் 2030ல் தண்ணீர் தேவை 6900 பில்லியன் கன மீட்டராக அதிகரிக்கும் என ஐ.நா.வின் நீர்வள ஆதார மையம் கணித்துள்ளது.

பருவநிலை மாற்றம், வெப்பமடைந்து வரும் பூமி, அதிகரித்து வரும் மக்கள் தொகை, போன்ற காரணங்களால் உலகின் பல்வேறு நாடுகளில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. உலகநாடுகளிடையே தண்ணீர் பகிர்வில் ஒருமித்த கருத்துணர்வு, ஒற்றுமையை உருவாக்கும் முயற்சியை ஐ.நா மன்றம் மேற்கொண்டுள்ளது.

இந்த நிலையில் இந்தியாவில் அண்டை மாநிலங்களிடையே தண்ணீர் பகிர்வில் ஆண்டுதோறும் ஏற்படும் சிக்கலை தீர்க்க மத்திய அரசு நிரந்தர தீர்வினை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சர்வதேச தண்ணீர் தினம் கொண்டாடப்படும் இந்த நேரத்தில் தண்ணீரைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்.

மார்ச் 22 சர்வதேச தண்ணீர் தினம் :

உலகில் 19 நாடுகள் 50 சதவீதத்திற்கும் மேலான தண்ணீர் தேவையை அண்டை நாடுகளையே நம்பியுள்ளன. ஆண்டு தோறும் மார்ச் மாதம் 22ம் தேதி சர்வதேச தண்ணீர் தினமாக கொண்டாடப்படுகிறது. அப்போது தண்ணீர் ஒத்துழைப்புக்கான கோஷங்களை முன்வைத்து பிரசார இயக்கங்களும் நடத்தப்படவுள்ளன.

தண்ணீர் மரணங்கள் :

ஒவ்வொரு பதினைந்து செகண்டுக்கு ஒரு குழந்தை தண்ணீர் சம்பந்த மான நோயால் பாதிக்கப்பட்டு மரணிக்கிறது இது ஐநாவின் கணக்கீடு.

சுகாதாரமான தண்ணீர் :

ஆற்றின் சீர்கேட்டால் 25 மில்லியன் பேர் புகலிடம் தேடி வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தனர் இது சென்ற ஆண்டு கணக்கு. உலகில் மூன்றில் ஒருவருக்கு போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை. ஐந்தில் ஒருவருக்கு சுகாதாரமான நல்ல குடிதண்ணீர் கிடைப்பதில்லை.

பசிக்கொடுமை அதிகமாகும் :

தண்ணீர் பற்றாக்குறையால் தானிய உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இதனால் இவற்றின் விலையும் ஒரு புறம் உயர்கிறது. தண்ணீர் கிடைக்காமல் போவது பசிக்கொடுமையை ஏற்படுத்துகிறது.

இந்தியாவின் தண்ணீர் உபயோகம் :

பெரும்பான்மையான இந்தியப் பெண்களின் வாழ்க்கை தண்ணீரை தேடிச்செல்வதிலேயே கழிகிறது. உலகின் மொத்த பூமி பரப்பில் 2.4 % இந்திய நில பரப்பு உள்ளது, மக்கள் தொகையில் 17%, கால்நடை வளர்ப்பு 18%, நீர் ஆதாரத்தில் 4% உள்ளது. தண்ணீரின் உபயோகம் 82 சதவிகிதம் விவசாயத்திற்கும், 8% தொழிற்சாலைகளுக்கும், மீதி 10 சதவிகிதம் நம் அன்றாட தேவைகளுக்கு செல்கிறது.

கடலில் கலக்கும் வெள்ளநீர் :

விவசாயத்திற்கான நதி நீர் பயன்பாடு இந்தியாவில் 20 சதவீதத்திற்கும் குறைவாகத்தான் உள்ளது. ஏராளமான வெள்ள நீர் ஆண்டு தோறும் கடலில் கலக்கிறது. அனைத்து மாநிலங்களும் ஒற்றுமையுடன் நதி நீரை பங்கிட்டுக்கொள்வதற்கு நதிகள் இணைப்பு தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.

அணை கட்டுவதில் அக்கறை :

கடலில் வீணாகும் தண்ணீரை சேமிக்க புதிய அணைகள் கட்டுவதில் மத்திய அரசுக்கும் போதிய அக்கறை இல்லை. இதைப் பற்றி மத்திய பட்ஜெட்டிலோ, மாநில பட்ஜெட்டிலோ சரியான அறிவிப்பு இல்லை.

2025 ல் தண்ணீர் பிரச்சினை :

மழை கால வெள்ளத்தை சேமிக்க 10 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக அதிகரிக்க வேண்டும். நீர் மேலாண்மை மேம்படுத்த வேண்டும். உரிய நடவடிக்கை இல்லாதபட்சத்தில், 2025ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பிரச்னை ஏற்படும்.

சீனாவில் அதிக அணைகள் :

உலகில் 45 ஆயிரம் பெரிய அணைகள் உள்ளன. சீனாவில் மட்டும் 22 ஆயிரம் பெரிய அணைகள் (26சதவீதம்) உள்ளன. அங்கு மக்கள் தொகை 130 கோடி. அமெரிக்காவின் மக்கள் தொகையோ 30 கோடி. ஆனால் அங்கு 6675 அணைகள் (14சதவீதம்). இந்தியாவில் மக்கள் தொகை 121 கோடி. இங்கு 4300 பெரிய அணைகள் உள்ளன. இது உலக அளவில் இது 9 சதவீதமாகும்.

கழிவுநீர் சுத்திகரிப்பு :

இஸ்ரேல் நாட்டில் தொழிற்சாலை, வீடுகள் ஆகியவற்றில் வெளியேறும் கழிவு நீரை சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்துகின்றனர். இதே நிலை இந்தியாவிலும் வர வேண்டும் என அறிஞர்கள் வலியுறுத்துகின்றனர்.

அண்டை மாநிலங்களால் பாதிப்பு :

தமிழ்நாட்டை பொருத்தவரை அண்டை மாநிலங்களால் தண்ணீர் நமக்கு கிடைப்பது தடுக்கப்படுகிறது. நகரம் விரிவடைவதால் அதை சார்ந்த பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகம்.

நதிநீர் இணைப்பு சாத்தியமா ?

தமிழ்நாட்டில் காவிரி -அக்னியாறு, தெற்கு வெள்ளார்-மணிமுத்தாறு-வைகை-குண்டாறு ஆகியவை இரண்டு கட்டங்களாக இணைக்கப்படும் என கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது அதேபோல தாமிரபரணி-கருமேனியார்-நம்பியார் ஆகியவையும் இணைக்கப்படும் எனவும், பென்னையார்-செய்யார் ஆறுகளும் இணைக்கப்படும் என வெறும் அறிவிப்பு மட்டுமே வெளியாகியுள்ளது.

2070 தமிழகம் பாலைவனமாகும் :

தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் மட்ட அளவு குறைந்து கொண்டே செல்கிறது. குளங்கள் வற்றுவதால் சூழ்நிலை சீர்கேடு, தண்ணீருக்கான சண்டைகள் அதிகரித்து வருகிறது. இப்படியே போனால் 2070 ல் தமிழ்நாடு பாலைவனமாக மாறும் வாய்ப்புகள் அதிகம் என்று எச்சரிக்கின்றனர்.

தண்ணீரின் அவசியம் :

தண்ணீரின் மகத்துவத்தை, சேமிப்பை நமது குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கவேண்டும். குளிப்பதற்கு துவைப்பதற்கு அளவான தண்ணீரை பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும்.

தண்ணீர் விளையாட்டுகளை குறைத்துக் கொள்ளலாம். வீடுகளில் மழைநீர் சேமிப்பு நடைமுறைபடுத்துவது. வீட்டை சுற்றி சிமிண்ட் தரைகளை அமைப்பதற்கு பதில் ப்ளாக்குகளை உபயோகிக்கலாம். மேலும் உலக வங்கி தலையிட்டு 1960ம் ஆண்டு இந்திய, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தப்படி சிந்து, ஜீலம், செனாப் நதி தண்ணீர் பாகிஸ்தான்தானுக்கு.

கிழக்கு நோக்கி பாயும் சட்லெஜ், பியாஸ், ரவி நதிகள் இந்தியாவுக்கு என பகிர்ந்து கொள்ளப்பட்டது. சிந்து நதியின் குறுக்கே புதிய அணைக்கட்டுகள், நீர் மின் திட்டங்கள் ஆகியவற்றை இந்தியா மேற்கொள்ளலாம். ஆனால் 80 சதவீத தண்ணீர் பாகிஸ்தானுக்கு போய் சேரவேண்டும் என்பது ஒப்பந்தம். இதன்படி இன்று வரை இரு நாடுகளும் அச்சுபிசகாமல் நடந்து கொண்டுள்ளன.

திங்கள், 18 மார்ச், 2013

பிளாஷ்டிக் பைகளின் மறுசுழற்சி பயன்


பொதுவாக இன்று பிளாஷ்டிக்கால் ஆன பைகளை மட்டுமே நாமனைவரும் பயன்படுத்திடும் நிலையில் உள்ளோம் அதனால் நாம் அவைகளை பயன்படுத்தியவுடன் கண்ட இடத்தில் வீசிஎறிந்து விடுகின்றோம் இதனால் எங்கெங்கு நோக்கினும் பிளாஷ்டிக் பைகளானது குப்பையாக மலைபோல் குவிந்து போகின்றன அதனை கூட்டி பெருக்கி மாநாகராட்சி, நகராட்சிகளின் ஊழியர்கள் சாலையோரங்களில் குவியிலிட்டு எரியூட்டுகின்றனர் அவ்வாறு எரிப்பதால் நச்சுபுகை காற்றில் பரவி நம்முடைய உடல்நலனிற்கு கேடு விளைவிக்கின்றன.

தாம் வழக்கமாக உண்ணும் வைக்கோல் போன்ற பொருள் இதுஎன நம்மால் கீழே கண்ட இடத்தில் வீசிஎறியப்படும் இந்த பிளாஷ்டிக் பைகளை விழுங்கிடும் மாடுகள் அதனுடைய உணவுக்குழாய் அடைபட்டு ஏராளமான அளவில்இறந்து போகின்றன

நம்மால் கீழே கண்ட இடத்தில் வீசிஎறியப்படும் இந்த பிளாஷ்டிக் பைகளானது மழைக்காலத்தில் நிலத்திற்குள் தண்ணீர் ஊடுருவி செல்ல முடியாதவாறு தடுத்துவிடுதால் இம் மழைக்காலங்களில் வெள்ள பெருக்கும் பெருஞ்சேதமும் ஏற்படுகின்றன அதுமட்டுமன்றி இதன் தொடர்ச்சியாக மழைநீர் நிலத்திற்குள் ஊடுருவி செல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் அபாயகரமாக குறைந்து விவசாயத்திற்கும் குடிநீருக்கும் நாமெல்லோரும் அல்லாட வேண்டிய நிலை ஏற்படவாய்ப்புள்ளது

இதுபோன்ற எண்ணற்ற தீங்குகள் நம்மால் கீழே கண்ட இடத்தில் வீசிஎறியப்படும் இந்த பிளாஷ்டிக் பைகளால் ஏற்படுவதால் நாம் இவைகளை தவிர்ப்பதற்கு முயற்சி செய்வோம் இல்லையெனில் அதனை சேகரித்து வைத்து பாதுகாப்பாக அப்புறபடுத்திட முயற்சி செய்திடுவோம் அதைவிட முதலில் இதற்கான விழிப்புணர்வாவது நம் அனைவரிடமும் ஏற்படுவதற்காக முயற்சி செய்வோம்

சமீபத்தில் இந்திய நாட்டின் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தம்முடைய தீர்ப்பில் பிளாஷ்டிக் பைகள் ஒரு அணுகுண்டு வெடிப்பதைவிட மிக அதிக தீங்கிழைப்பவையாக உள்ளன அதனால் உடனடியாக போர்க்கால அடிப்படையில் அதனை தவிர்ப்பதற்கான நடவடிக்கையயையும் அதற்கு மாற்று ஏற்பாட்டினையும் செய்திடுக என உத்திரவிட்டுள்ளது

இந்த பிளாஷ்டிக் பைகளை பின்வரும் வழிகளில் மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதன்மூலம் மேலேகூறிய தீங்களிலிருந்து நம்மை காத்திட முடியும்

1- மளிகை கடைகளில் கொள்முதல் செய்த பொருளைஎடுத்து வருவதற்காக நாம் மளிகை கடைகளுக்கு திரும்ப செல்லும் போதெல்லாம் நம்மால் முன்பு பெறபட்ட பிளாஷ்டிக் பைகளையே மீண்டும் மீண்டும் பயன்படுத்திடுவது நல்லது

2- முன்பு நாம் மளிகை பொருட்களை எடுத்து செல்வதற்காக பயன்படுத்திய பிளாஷ்டிக் பைகளை மளிகை கடைகளுக்கு திரும்ப செல்லும் போது அம்மளிகை கடைகளுக்கே திரும்ப கொடுத்திடுவது அதனினும் நன்று

3- நம்முடைய வீட்டிலுள்ள கழிப்பறைகளில் ,அலுவகங்களை சுற்றி குப்பைகளை போடும் தொட்டியாக இதனை பயன்படுத்திடுக
4- சமையல் அறையில் பயன்படுத்தபடும் எளிதில் வீணாக்கூடிய காய்கறிபொருட்களை இந்த பிளாஷ்டிக் பைகளுக்குள் இட்டு குளிர்பதன பெட்டிக்குள் வைத்து பராமரித்திட பயன்படுத்திடுக

5- வீட்டின் முற்றத்தில் அல்லது புழக்கடை பகுதியில் இந்த பிளாஷ்டிக் பைகளை குப்பைத்தொட்டிபோன்று வைத்து பயன்படுத்திடுக.

6- நூலகங்களில் நூல்களை எடுத்து செல்லும் பைகளாக பயன்படுத்திடுமாறு நூலகங்களுக்கு இதனை நன்கொடையாக வழங்கிடுக

7- காலில் அணியும் முழுக்காலணியின் உள்பகுதியை பாதுகாத்திட இந்த பிளாஷ்டிக் பைகளை பயன்படுத்திடுக.

8- இந்த பிளாஷ்டிக் பைகளை வெட்டி பின்னலால் ஆன பல்வகை கைப்பைகளாக உருவாக்கி பயன்படுத்தி கொள்க
9- இந்த பிளாஷ்டிக் பைகளை வெட்டி பின்னல் செய்து அழகிய வகைவகையான பூவேலைப்பாடு செய்து பயன்படுத்திகொள்க

வியாழன், 7 மார்ச், 2013

நாம் தூக்கி எறியும் குப்பைகளின் மதிப்பு




தரமான பாலிதீன் பைகளில் இருந்து பிளாஸ்டிக் ஹோஸ்,பிளாஸ்டிக் டப்பாக்கள் தயாரிக்கிறார்கள். அதாவது சின்டெக்ஸ் தொட்டி போன்றவை தொடங்கி பைப்புகள் வரை தயாரிக்கிறார்கள். நாம் தூக்கி போடும் பாலிதீன் பைகளை இது போன்ற பொருட்கள் தயாரிக்க வாங்கிக் கொள்கிறார்கள். ஆக..பாலிதீன் பைகளை சேர்த்து வைத்தால் கிலோ ஒன்றுக்கு 5 ரூபாய்க்கு எடுத்துக் கொள்கிறார்கள்

பிளாஸ்டிக்கில் 'கடக்' பிளாஸ்டிக் என்று ஒரு வகை. அதாவது கையால் உடைத்தால் உடைந்து போகும் ரகம். இது கிலோ ஒன்றுக்கு விலை 3 ரூபாய். இந்த பிளாஸ்டிக்கை இரண்டாம் தர பிளாஸ்டிக் என்கிறார்கள். இந்த வகை பிளாஸ்டிக்குகள் பெயிண்ட் பிரஷ் கைப்பிடி, குடம் தயாரிக்க போகிறது.

நீஙகள் டிவி.மிக்சி என்று பொருட்கள் வாங்கும் போது அட்டையில் சுற்றி பேக்கிங் செய்து வரும். இந்த வகை அட்டை பெட்டிகள் கிலோ 5 ரூபாய்க்கு போகிறது. இந்த அட்டைகள் மீண்டும் புதிய பேக்கிங் அட்டைகள் செய்ய பயன்படுகிறது.

சிகரெட் பெட்டிகள் கிலோ ஒன்றுக்கு 2 ரூபாய் வரை விலை தருகிறார்கள். இந்த சிகரெட் பெட்டிகளை மறுசுழற்சி செய்து மீண்டும் அட்டைகள், பேப்பர் தயாரிக்க பயன்படுத்துகிறார்கள்.

பிளாஸ்டிக் வயர்களை துண்டுதுண்டாக கிடந்தால் அவற்றையும் குப்பையில் போடுவோம். ஆனால் அவற்றின் உள்ளே உள்ள காப்பர் கம்பியின் விலை கிலோ ரூ.80 க்கு வாங்கிக் கொள்கிறார்கள்.

தேங்காயை எடுத்து சட்னி அரைத்து விட்டு சிரட்டையை தூக்கி எறிந்து விடுவோம். இது போன்ற சிரட்டையின் மதிப்பு 1 டன் ரூ.1500க்கு விலை போகிறது. இந்த சிரட்டையை வைத்து செங்கல் சூளையில் விறகுக்கு பதிலாக செங்கலை சுட பயன்படுத்துகிறார்கள். இது தவிர கொசுவர்த்தி, தயாரிக்கவும் சிரட்டை பயன்படுகிறது.

பால் கவர்கள் கிலோ ரூ.10 முதல் 12 வரை கொடுத்து வாங்கி கொள்கிறார்கள்.

தகரம் கிலோ 4 ரூபாய்க்கும், பழைய இரும்பு கிலோ 12 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை கொடுத்து வாங்கிக் கொள்கிறார்கள்.

வீட்டில் தினமும் டீ தயாரித்து சாப்பிடுகிறீர்களா? வீணாகும் டீத்தூளை அப்படியே சேர்த்து வைத்திருங்கள். இவற்றை வைத்து உரம் தயாரிக்கிறார்கள். காபி தூளிலிருந்தும் தான் இப்படி உரம் தயாரிக்கிறார்கள். ஆக..வீணான இந்த டீ.காபி தூள்களில் விலை 10 கிலோவுக்கு 5 ரூபாய் தருகிறார்கள்.

பெட்பாட்டில் வாங்கி விட்டு தூக்கி போடாதீர்கள். வீணான பெட்பாட்டிலின் விலை கிலோ 8 ரூபாய்.

பழைய வெள்ளை பேப்பர் கிலோ ஒன்றுக்கு 6 முதல் 10 வரை கிடைக்கும்.

அரசு அலுவலகங்களிலிருந்து வரும் பேப்பர் கழிவுகள் மற்றும் பிரிண்டிங் பிரஸ் கழிவுகளிலிருந்து வெள்ளை பேப்பர் கழிவுகளை மறு சுழற்சி செய்து மீண்டும் பேப்பர்கள் தயாரிக்கிறார்கள்.

அலுமினியம் பாயில் பேப்பர்( உணவு பொருட்களை பார்சல் செய்ய பயன்படுவது) கிலோ 18 ரூபாய்க்கு வாங்குகிறார்கள். இதை மறுசுழற்சி செய்து அலுமினிய பேப்பராக மீண்டும் செய்கிறார்கள்.

தலைமுடி கிலோ 1 ரூபாய் முதல் 2 ரூபாய்க்கு எடுத்துக் கொள்கிறார்கள்.

நெர்லான் செருப்புகள் கிலோ 8 ரூபாய்க்கு விலை போகிறது.

வீணான டியூப்லைட் ஒன்றுக்கு 1 ரூபாய் விலை நிர்ணயித்து வாங்குகிறார்கள்.

ரப்பர் கழிவுகள்,டயர்களை மறுசுழற்சி செய்து ரப்பர் பொருளாக தயாரிக்கிறார்கள். எனவே வீணான டயர்கள், டியூப்களை வைத்திருங்கள். இவற்றை கிலோ 5 முதல் 10 வரை தருகிறார்கள்.


குப்பைகளை தெருவில் போடுவதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது...தவிர்ப்போம் !

சனி, 2 மார்ச், 2013

மண்புழு உரம்



வீட்டுத் தோட்டம்
-------------------------------

மண்புழு உரம் பற்றி பலருக்கு தெரிந்திருக்கலாம்...உரம் தயாரிக்க தோட்டத்தில் இடம் இல்லாதவர்கள் மொட்டை மாடியில் வைத்தும் தயாரிக்கும் விதமாக தார்பாலின் ஷிட்டால் செய்யப்பட்ட படுகை கிடைகிறது.

இதனை வாங்கி உபயோகிக்கலாமென்று வாங்கி நிறுவி பார்த்ததில் எளிமையாக உள்ளது. நிறுவுவதும் மிக எளிது.

காற்று... படுகையினுள் சென்றுவர வசதியாக வலைஅமைப்பு உள்ளது.

மண்புழுகுளியல் நீர் (Vermiwash) எளிதாக எடுப்பதற்கு வசதி தந்திருப்பது இதன் சிறப்பு. அமைக்கும் போது இந்தப் பகுதி தாழ்வாக இருக்குமாறு அமைத்தால் எளிதாக மண்புழுகுளியல் நீர் சேகரிக்கலாம்.

கட்டிடம் ,கூரை தேவையில்லையென தோன்றுகிறது. தேவைப்படின் இதற்கு மேலாகவே HDPE Sheet கொண்டு மிக எளிதாக கூரை அமைக்கலாம். வழக்கம் போல் எறும்புத் தொல்லை உண்டு. படுகையைச் சுற்றி மஞ்சள் பொடி இட வசதியாக உள்ளது. எறும்பு மருந்து இடுபவர்களுக்கும் வசதிதான் உரப்படுகையை சுற்றி இட்டாலும் புழுக்களுக்கும் மருந்திற்கும் இடையே உரப்படுகையிருப்பதால் புழுக்களுக்கு சேதம் இல்லை. மாடித்தோட்டத்தில் கூட பயன்படுத்த உகந்தது.

தேவைபடுபவர்கள் கொடுக்கப்பட்டுள்ள முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

தொடர்பிற்கு
ஸ்ரீ அர்ஜுன் தார்ப்பாலின் இண்டஸ்ட்ரீஸ்
47, ராஜாஜி ரோடு,
சேலம். 636 007
செல் : 94422-12345

மண் புழு உரம் எப்படி தயாரிப்பது குறித்த விவரங்கள் தேவை என்றால் விரைவில் பகிர்கிறோம்.

வீட்டுத் தோட்டம் காலத்தின் கட்டாயம் என்பதை புரிந்துகொள்ளுங்கள், இயன்றவரை காய்கறிகளை வீட்டில் பயிரிட முயற்சி செய்யுங்கள். இதனை குறித்த பதிவுகளை தொடர்ந்து இனி பகிர இருக்கிறோம். வீட்டுத்தோட்டம் என்பது ஆரோக்கியம் மறக்காதீர்கள் !! வாழ்த்துக்கள் !! 

வீட்டுத் தோட்டம் - தொட்டியில் எளிதாக செடி வளர்க்க



வீட்டுத் தோட்டம் - தொட்டியில் எளிதாக செடி வளர்க்க
-----------------------------------------------------------------------------------------------

நகரவாழ்கையில் அதிக செலவின்றி அதேசமயம் தேவையற்ற சில பொருட்களைக் கொண்டு சிறப்பாக தொட்டிகளில் செடிகளை வளர்க்க இயலும். தேங்காய் உரித்த தென்னை மட்டைகளை எவ்வாறு அகற்றுவது என்றாகிவிடும். அதேபோன்று பயணம் முடிந்து வரும் போது குடிநீர் “பெட்” பாட்டில்களை தூக்கி எறிந்து மாசுபாட்டை உண்டாக்கிவிட்டு வருவோம். இந்த இரு பொருட்களையும் தொட்டிகளில் செடி வளர்க்க உபயோகிக்கலாம். வேர் பகுதிக்கே நீர் செல்வதால் மிகக் குறைந்த அளவு நீர் ஊற்றினாலே போதும். மெதுவாக வெறியேறும் நீரை தென்னை மட்டைகள் உறிஞ்சி வைத்துக் கொள்ளும். மண் சிதறுதல், நீர் தேங்கி வேர் அழுகுதல் போன்றவை இல்லை. வாரத்திற்கு ஒரு நாள் ஊற்றினாலே போதும்.

செய்முறை

மண் தொட்டியில் முதலில் தென்னை மட்டையை(3 pieces)நிரப்புங்கள்

பாட்டில் மூடியில் துவாரம் செய்யுங்கள், பாட்டிலின் மேல் பாகத்தை முழுதாக கட் செய்து கொள்ளுங்கள்.

மூடி பகுதி கீழாக இருக்குமாறு தலைகீழாக மட்டையின் அருகில் வையுங்கள்

போதுமான அளவு மண் இட்டு நிரப்புங்கள்

செடியை நடுங்கள்

அவ்வளவு தான். இரண்டு மூன்று நாள் வெளியூர் செல்ல வேண்டுமே, செடிகள் வாடிடுமே என்ற கவலை இனி வேண்டாம். இம்முறையில் செடியை நட்டு விடுங்கள், போதும்.

உற்சாகமான வீட்டுத் தோட்டத்திற்கு எங்களின் வாழ்த்துக்கள் !