சனி, 21 மார்ச், 2015

துளசி(ஆக்ஸிஜன்)செடியின் மகிமை

துளசி(ஆக்ஸிஜன்)செடியின் மகிமை
--
ஒவ்வொருவரின் வீடுகளிலும் வளர்க்கவேண்டிய தாவரம் துளசிச்செடி ஏனெனில் பிராணவாயுவான ஆக்ஸிஜனை அதிகமாக வெளியிடும் ஒரே தாவரம் துளசி
துளசிச்செடியை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். மற்ற செடிகளைப்போலல்ல இந்த துளசி. மனிதனுக்கு மிகவும் பயன்தரவல்ல செடி. பல வழிகளில் பயன்தரும் இந்த துளசிச்செடியின் மகிமையை சற்றுக்கவனிப்போம்.
பகல் இரவு என இரு நேரங்களிலும் ஆக்ஸிஜன் வெளியிடும் ஒரே தாவரம் துளசி
துளசிச்செடி வளர்த்துவந்தால் வீட்டில் விஷப்பூச்சிகள் அண்டாது. அதுமட்டுமல்ல, காற்றிலுள்ள நச்சுத்தன்மையையைப்போக்கி சூழலைக்காக்கும் ஆற்றலுடையது துளசி.
இதைவிட ஆச்சரியமானது என்னவென்றால், மழைக்காலத்தில் இடி விழாமல் (மின்னல் தாக்காமல்) வீட்டைப்பாதுகாப்பதில் துளசிச்செடி பெரும்பங்கு வகிப்பதாக சித்தர்கள் கூறியிருக்கின்றார்கள்.
தேள் கொட்டிய இடத்தில் துளசி இலைகளை எடுத்து தேய்த்துவிட்டால் விஷம் உடலில் பரவாது.
துளசி இலைகளை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் தேன் கலந்து பருகினால் புத்துணர்வு கிடைக்கும். தேநீர் எதுவும் தேவையில்லை.
புத்துணர்வுப்பானமாக மட்டுமல்லாது சனி, காய்ச்சல் போன்ற நோய்களுக்கு மருத்துவ பானமாகவும் இது செயல்படுகின்றது.
பெண்களின் கருப்பையை பலப்படுத்தவும்,
ஆண்மைக்குறைபயைப்போக்கவும்,
தாய்ப்பால் சுரப்பினை அதிகரிக்கவும் உதவுகிறது.
துளசி அனல் தன்மை கொண்டதால் உடலிலுள்ள கிருமிகளை அழிக்கவல்லது.
நமது முன்னோர்கள் குடிநீரை சுத்திகரிப்பதற்காக துளசி இலைகளை பயன்படுத்தியிருக்கிறார்கள்.
துளசியுடன் வேப்பிலைசேர்த்து அரைத்து பேன் தொல்லைக்கும் ஏன் முகத்திற்கும் கூட சிலர் இதைப்பயன்படுத்துவார்கள். முழுமையான தீர்வு கிடைக்கும். இந்தியாவில் காய்ந்த துளசி இலைகளை உணவுக்கும் பயன்படுத்துகிறார்கள்.
உங்கள் வீட்டில் ஒரு துளசிச்செடியை நட்டு வளர்த்து வாருங்கள்.அது உங்கள் வருங்கால சந்தியினருக்கு தூய்மையான காற்றை தரவல்லது
Additional info
துளசி என்பதற்கு ஒப்பில்லாதது என்று பொருள். இதிலிருந்தே துளசியின் பெருமையை நாம் புரிந்து கொள்ளலாம்.
எந்த இடத்தில் துளசி வளர்ந்திருக்கிறதோ அங்கு மும்மூர்த்திகளுடன், அனைத்து தேவர்களும் வசிக்கிறார்கள் என்று அர்த்தம். வீடுகளில் துளசிச் செடி வைத்து வளர்ப்பதும், அதனை பால், அபிஷேக நீர், கங்கை நீர் கொண்டு வளர்ப்பதும், தினமும் பூஜை செய்து வழிபடுவதும் சிறப்பான பல நல்ல பலன்களை தரும். துளசிச் செடி உள்ள வீட்டில் எந்த துஷ்ட சக்திகளும் நுழையாது.
விஷப்பூச்சிகள் வராது. உள்வரும் அசுத்த காற்றும், துளசியின் மருத்துவ குணத்தால் நம்மை அண்டாது. எனவே குழந்தைகள் ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கும். மாங்கல்ய பலத்துக்கு பெண்களின் மாங்கல்ய பலத்துக்கு துளசி பூஜை என்பது முக்கியமானது.
தங்களின் வீடுகளில் துளசி மாடம் அமைத்து அதற்கு விளக்கேற்றி காலை, மாலை என இரு வேளைகளில் பூஜை செய்து மாடத்தினை வலம் வந்து வழிபட்டால் பலன் கிடைக்கும். துளசி மாடத்தை பூஜிக்க, வேறு துளசி செடியில் இருந்துதான் இலைகளை பறித்து பயன்படுத்த வேண்டும். துளசி வனம் இருக்கும் வீட்டில் துர்மரணங்கள் நிகழாது. நாராயணருக்கு, தினமும் துளசியால் அர்ச்சனை செய்து வழிபடுபவர்களுக்கு மறு பிறவி கிடையாது என்றும் பத்மபுராணம் கூறுகிறது