சனி, 21 மார்ச், 2015

மூலிகை ஸ்பைரல் /சுருள் கூம்பு வடிவ மூலிகை தோட்டம் .

மூலிகை ஸ்பைரல் /சுருள் கூம்பு வடிவ மூலிகை தோட்டம் .
வீட்டில் மூலிகை தோட்டம் போட அதிக இடம் மற்றும் சூரிய ஒளி இல்லை என்பவர்கள் இந்த மூலிகை ஸ்பைரல் முறையில் சிறியஇடத்தில தேவையான மூலிகை செடிகளை நம் வீட்டிலேயே வளர்க்கலாம் .ஒரு சிறிய இடத்தில பல்வேறு குணங்கள் மற்றும் வளரும் தன்மையுடைய மூலிகை செடிகள் வளர்கின்றன.
இது இயற்கையோடு ஒட்டி அமைந்த ஒரு அமைப்பு .இதே போலதான் நத்தையின் கூம்பு சுருள் வடிவமானது இடத்தை சேமிக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது .
நீரை சேமிக்க மற்றும் மகரந்த சேர்க்கைக்குதவும் பூச்சியினங்களை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது,
இந்த அமைப்பின் வடிவம் மையத்தை நோக்கி சுழல் போன்ற உயரமாக முடிக்கப்பட்ட ஒரு கூம்பு வடிவம் கொண்டது .. இத்தோட்டத்தில் சுற்றி ஓரங்களில் சுருள் வடிவில் அமைக்கப்பட்டுள்ள செங்கல் சுவர்களின் நிழலில் வெயில் அதிகம் தேவைப்படாத செடிகள் வளரும் .செங்கற்கள் அதிக வெயில் தாக்காமல் அத்தகைய மூலிகை செடிகளை காக்கும் .மேலும் இக்கற்கள் அதிக சூட்டினை உள் இழுத்து தக்க வைத்து இரவு நேரத்தில் செடிகளுக்கு அந்த சூட்டை தந்து அதிக குளிரிலிருந்து காக்கின்றன .
அதிக சூரிய ஒளி தேவைப்படும் செடிகள் மேல்புறத்தில் சுருள் சுழலின் உச்சியில் நடப்படுகின்றன .மேலும் தண்ணீர் அதிகம் தேவைப்படாத மூலிகை செடிகள் உச்சியில் நடப்படுகின்றன அதிக நீர் தேவைப்படும் தாவரங்கள் கீழ்பகுதியில் வளர்கின்றன சுருள் அமைப்பில் நீர் மேலிருந்து வடிந்து அனைத்து செடிகளையும் நனைத்து வழிந்து கீழே இறங்கும் வண்ணம் உள்ளது திருகு சுருள் போன்ற இவ்வமைப்பு .. .விரும்பினால் இறுதியாக வடிந்து ஓடும் நீரை சிறு குளம் போல அமைக்க தவளை போன்ற உயிரினங்கள் வளர இடம் தரலாம் அவை வேண்டாத பூச்சிகளை உண்டு வாழும் .
இவ்வமைப்பு சிறிய இடத்தில உள்ளதால் பராமரிக்க மற்றும் அறுவடை செய்ய சுலபமாக இருக்கும் .அடுக்குமாடி குடியிருப்புகளில் கூட லான்ட்ஸ்கேப்பிங் செய்பவர்களிடம் இத்தகைய அமைப்பை உருவாக்க சொல்லலாம் .
basil /துளசி ,coriander /கொத்தமல்லி ,தக்காளி oregano ,ஓமம் ,ஓமவல்லி ,வெந்தயக்கீரை ,பூண்டு ,புதினா ,வெங்காயத்தாள் ,ரோஸ் மரி ஆகியவற்றை இந்த தோட்டத்தில் வளர்க்கலாம் .அத்துடன் ஒன்றிரண்டு சாமந்தி செடிகளும் வளர்க்க அவை மகரந்த சேர்க்கைக்கு சிறந்த காரணிகளாக உதவும் ..