செவ்வாய், 23 ஏப்ரல், 2013

பழைய பிளாஸ்டிக் பாட்டிலை உபயோகித்து நெல் நாற்றாங்கால் தயாரித்தல்

காலியான தேவையற்ற 2 லிட்டர் கொள்ளளவு கொண்ட பாட்டிலை, நீள் வாட்டத்தில் வெட்டி, நெல் நாற்றை வளர்பதற்கு உபயோகப்படுத்தலாம்.

பாட்டிலின் இந்த பாதி பகுதியை, வண்டல் மண், மண்புழு உரம் மற்றும் நெல் உமியை 3:2:1 விகித கலவையை கொண்டு நிரப்ப வேண்டும். தோராயமாக, ஒரு பாதி பாட்டிலுக்கு, 300 கிராம் கலவை தேவைப்படும்.
அமிர்தகரைசல் /பிஜாமிர்த்துடன் (இயற்கை உரங்கள்) நேர்த்தி செய்யப்பட்ட விதையை இந்த பாட்டிலில் உள்ள படுக்கையில் விதைக்க வேண்டும். ஒவ்வொரு படுக்கையிலும், 10 கிராம் விதையை விதைக்க வேண்டும்.

இரண்டு நாட்களுக்கு ஒரு முறை, நீர் ஊற்றி விதை படுக்கைகளை ஈரப்பதத்துடன் வைத்திருக்க வேண்டும்.

நாற்றுகள், பத்து தினங்களில், நடுவதற்கு தயாராகிவிடும். ஒரு ஹெக்கடரில் நடுவதற்கு, பின்வருபவை தேவையானவை;

- காலிபாட்டில் எண்ணிக்கை
(பாதியாக வெட்டப்பட்டவை) - 625
- விதை - 6.3 கிலோ
- வண்டல் மண் - 93.8 கிலோ
- மண்புழுஉரம் - 62.5 கிலோ
- சாம்பல் - 31 கிலோ
- தயாராகும் நாற்றுகள் - 2,00,000

இந்த முறையை, நகரத்தின் அருகாமையில் உள்ள கிராமங்களில் இடம் மற்றும் வேலையாட்கள் நெருக்கடியான தருணத்தில் உபயோகிக்கலாம்.

- திரு. சஞ்சய் பயேல்,ஜவகர் தல், தானே

மூலம்: இயற்கை சாகுபடி முறைகள்,
தொழில்நுட்ப கூட்டுறவு திட்டம்,FAO, நியுடெல்லி மற்றும் NCOF , காசியாபாத்.
தயாரித்தது: மகாராஷ்டிர இயற்கை விவசாய குழு (MOFF)