செவ்வாய், 8 ஏப்ரல், 2014

Bio pore absorbing Hole /மழை நீர் சேமிக்க மற்றும் இயற்கை உரம் இரண்டிற்கும் ஒரு எளிய வழிமுறை 

நீரின்றி அமையாது இவ்வுலகு வானம் மும்மாரி பொழிந்தாலும் கட்டுகடங்காமல் நீர்நிலைகள் 
நிரம்பி எல்லாமே கடலை நோக்கி சென்றடைகின்றன ..

இப்படி வீணாக கடல் கலக்கும் நீரை சேமிக்க நமது வளங்களுக்கு பயன்படுத்த ஒரு எளிய முறையை
இந்தோனேஷியாவில் .Dr. Kamir Pariadin Broto, என்பவர் கண்டுபிடித்திருக்கிறார் .

1, நீரானது நிலத்தை சென்றடையாதவாறு பெரும்பாலும் கான்க்ரீட் தளத்தால் மூடிவைக்கிறோம் (

கட்டிடம் எழுப்பும்போது கொஞ்சமேனும் கருணை வைத்து சில பகுதிகளை நீர் பூமியை அடைய ஒதுக்கி வைங்க .

மழை நீர் நிலத்தின் மேற்பரப்பில் விழும்போது உடனே நிலமானது அதனை உறிஞ்சாது அதற்கென இந்த உறிஞ்சும் துவாரங்களை ஏற்படுத்த வேண்டும்

2, சுமார் 10 cm அகலம் மற்றும் 80-100 cm ஆழம் இருக்குமாறு துவாரங்கள் தோண்ட வேண்டும்
ஜாவாவில் இதற்கு ஸ்பெஷல் உபகரணம் பயன்படுத்துகிறார்கள் .
நாம் கடப்பாரை போன்றதைபயன்படுதினால் போதும் .

3,வாகன தரிப்பிடம் ,கட்டிடங்களின் பின்புறம்/நீர்பாசன வசதியற்ற எந்த இடத்திலும் இவ்வாறான துவாரங்கள் ஏற்படுத்தலாம் .
,
இதுவாரங்களில் இயற்கை,உயிர்கழிவுகலான காய்ந்த இலை ,அழுகிய பழங்கள் (compost )ஆகியவற்றை நிரப்பிமூட வேண்டும் ..
இவை மழை இல்லாத நாட்களில் உரமாக எடுத்து பயன்படுத்தலாம் .

இதுவாரங்களில் எறும்புகள் ,மண்புழுக்கள் இன்னபிற நுண்ணியிரிகள் தாமாக வளர்ந்து நிலத்தடியை வளப்படுத்தும் ..இதனால் நீர் வேகமா நிலத்தில் உறிஞ்சப்படும்
.
.இந்த துவாரங்கள் ஏற்படுத்தும்போது முக்கிய கவனத்தில் கொள்ளவேண்டியது

மேற்புறம் 10 cm ஆக இருப்பதால் கண்டிப்பாக மேற்புரத்தை கம்பி வலையால் மூடி பாதுகாக்கவேண்டும் .இலை ,காய்ந்த சருகுகளால்,மற்றும் organic கழிவுகளால் நிரப்பிகொண்டேய்ருக்க வேண்டும்

சிறு உயிரினங்கலான அணில்கள் ,பறவைகள் இதில் விழ இடம் கொடுக்க கூடாது .

சிறிய கடப்பாரை போன்ற உபகரணம் போதும் 80-100 செ .மீ அளவு துவாரம் தோண்ட ..

முக்கியமாக நினைவில் கொள்ள வேண்டியது ..இந்த துவாரத்தில் இலை மற்றும் இயற்கை
கழிவுகள் மட்டுமே செல்லுமாறு பார்க்க வேண்டும் ...
பிளாஸ்டிக் ,சிகரெட் பில்டர் ஆகிய காலத்தால் அழிக்க முடியாதவை இங்கு சேர்ந்தால்
இந்த துவாரத்தால் ஒரு பயனும் இல்லை