சனி, 2 மார்ச், 2013

வீட்டுத் தோட்டம் - தொட்டியில் எளிதாக செடி வளர்க்க



வீட்டுத் தோட்டம் - தொட்டியில் எளிதாக செடி வளர்க்க
-----------------------------------------------------------------------------------------------

நகரவாழ்கையில் அதிக செலவின்றி அதேசமயம் தேவையற்ற சில பொருட்களைக் கொண்டு சிறப்பாக தொட்டிகளில் செடிகளை வளர்க்க இயலும். தேங்காய் உரித்த தென்னை மட்டைகளை எவ்வாறு அகற்றுவது என்றாகிவிடும். அதேபோன்று பயணம் முடிந்து வரும் போது குடிநீர் “பெட்” பாட்டில்களை தூக்கி எறிந்து மாசுபாட்டை உண்டாக்கிவிட்டு வருவோம். இந்த இரு பொருட்களையும் தொட்டிகளில் செடி வளர்க்க உபயோகிக்கலாம். வேர் பகுதிக்கே நீர் செல்வதால் மிகக் குறைந்த அளவு நீர் ஊற்றினாலே போதும். மெதுவாக வெறியேறும் நீரை தென்னை மட்டைகள் உறிஞ்சி வைத்துக் கொள்ளும். மண் சிதறுதல், நீர் தேங்கி வேர் அழுகுதல் போன்றவை இல்லை. வாரத்திற்கு ஒரு நாள் ஊற்றினாலே போதும்.

செய்முறை

மண் தொட்டியில் முதலில் தென்னை மட்டையை(3 pieces)நிரப்புங்கள்

பாட்டில் மூடியில் துவாரம் செய்யுங்கள், பாட்டிலின் மேல் பாகத்தை முழுதாக கட் செய்து கொள்ளுங்கள்.

மூடி பகுதி கீழாக இருக்குமாறு தலைகீழாக மட்டையின் அருகில் வையுங்கள்

போதுமான அளவு மண் இட்டு நிரப்புங்கள்

செடியை நடுங்கள்

அவ்வளவு தான். இரண்டு மூன்று நாள் வெளியூர் செல்ல வேண்டுமே, செடிகள் வாடிடுமே என்ற கவலை இனி வேண்டாம். இம்முறையில் செடியை நட்டு விடுங்கள், போதும்.

உற்சாகமான வீட்டுத் தோட்டத்திற்கு எங்களின் வாழ்த்துக்கள் !